முரு. கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முரு. கந்தசாமி (பிறப்பு: மார்ச்சு 14, 1943) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் மலேசிய பொதுப்பணித் துறை அலுவலராக பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

இவர் 1960 முதல் சுமார் ஐந்து தசாப்த்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், உருவகக் கதைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் படைப்பிலக்கியத் துறையிலும் இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். மலேசிய தேசிய பத்திரிகைளிலும், இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.

பொதுச் சேவைகள்[தொகு]

பொதுச் சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், மலேசிய, இந்தியர் காங்கிரசிலும், தைப்பிங் தமிழ் எழுத்தாளர் - வாசகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரு._கந்தசாமி&oldid=3225396" இலிருந்து மீள்விக்கப்பட்டது