மிங் அரசமரபு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிங் அரசமரபு மங்கோலியர்களின் யுவான் அரசமரபின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, 1368 முதல் 1644 வரை சீனாவை ஆண்ட ஒரு அரசமரபு ஆகும். மிங் அரசமரபுபே, சீனாவின் மிகப்பெரிய இனமான ஆன் இனத்தின் கடைசி அரசமரபு ஆகும். இது லீ சிசெங்கின் தலைமையிலான கிளர்ச்சியினால் ஒரு பகுதி வீழ்ச்சியடைந்தது. பின்னர் மாஞ்சுக்களின் தலைமையிலான சிங் அரசமரபு ஆட்சியைக் கைப்பறியது. மிங் தலைநகரான பெய்ஜிங் 1644 ல் வீழ்ச்சியடைந்தபோதும், மிங் அரசமரபுபினரின் எச்சங்கள் சில பகுதிகளில் 1662 ஆம் ஆண்டு வரை நீடித்தன. இவை அனைத்தும் கூட்டாக தெற்கு மிங் எனப்படுகின்றன.
மிங் ஆட்சிக்காலத்தில் பாரிய கடற்படையும், ஒரு மில்லியன் வீரர்களைக் கொண்ட காலாட்படையும் கட்டியெழுப்பப் பட்டன. இக் காலத்தில் பாரிய கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. இவற்றுள், பெரும் கால்வாய், சீனப் பெருஞ் சுவர் ஆகியவற்றுக்கான திருத்த வேலைகள், 15 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதியில் பெய்ஜிங்கில் பேரரண் நகரம் அமைக்கப்படமை என்பன அடங்கியிருந்தன. மிங் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் மக்கள்தொகை 160 தொடக்கம் 200 மில்லியன்கள் வரை இருந்திருக்கலாம் என மதிப்பிட்டு உள்ளனர். கல்காரிப் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, உலக வரலாற்றில் ஒழுங்கான அரசு, சமூக உறுதிப்பாடு என்பவற்றைக் கொண்ட சிறப்பான காலப் பகுதியொன்றை மிங் அரசு உருவாக்கியிருந்தது.
இவற்றையும் பார்க்க [தொகு]