பாங்கு
பாங்கு அல்லது அதான் என்பது இசுலாமியர்களின் தொழுகைக்கான அழைப்பு ஆகும். ஒரு நாளில் ஐந்து முறை அதான் விடுக்கப்படும். பாங்கு என்பது பாரசீகச் சொல்லாகும். அதான் [அரபி:أذان] [மலையாளம்:ആദാൻ] என்பது அரபிச் சொல்லாகும்.
வரலாறு [தொகு]
முஸ்லிம்கள் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் ஒன்று கூடி தொழுககை்கான நேரத்தை முடிவு செய்தனர். முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். ஆலோசனையின் போது சிலர் நெருப்பை மூட்டலாம் என்றும் சிலர் மணி அடிக்கலாம் என்றும் கூறினர். ஆனால் இவையெல்லாம் மறுக்கப்பட்டன. அப்போது உமர் (ரலி) ‘தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றார். உடனே பிலால் (ரலி) அவர்களிடம் ‘பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்” என்று முகம்மது நபி (ஸல்) கூறினார்.
தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்) [தொகு]
”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் – அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
ஹய்ய அலஸ்ஸலாஹ் – ஹய்ய அலஸ்ஸலாஹ்
ஹய்ய அலல்ஃபலாஹ் – ஹய்ய அலல்ஃபலாஹ்
”அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லல்லாஹு”
அதிகாலை 'சுப்ஹ்' தொழுகைக்காக அழைப்பு விடும்போது கீழ்வரும் வரிகளை இணைத்து அழைப்பு விடுவர்.
அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம் - அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம் (பொருள்: தூக்கத்தை விட்டும் நீங்கி தொழுகைக்காக வாருங்கள்)
பொதுமக்கள் இதை பாங்கு சொல்லுதல் என்றும் கூறுவர். பாங்கு அழைப்பைக் கொண்டு இசுலாமியர் அல்லாதோர் நேரத்தைக் கணிப்பதும் உண்டு.