பழங்குடியினர் தொடர்பான அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
ஆண்டு நிதிரூபாய் 6000 கோடி (2018-19)[1]
பொறுப்பான அமைச்சர்கள்
அமைப்பு தலைமை
வலைத்தளம்tribal.gov.in

பழங்குடியினர் விவகார அமைச்சகம், 1999ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இரண்டாகப் பிரித்த போது, பட்டியல் பழங்குடியின மக்களின் பின்னர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் ஒருங்கிணைந்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தும் அணுகுமுறையை வழங்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் இந்த அமைச்சகம் அமைக்கப்பட்டது.[2] இதன் தற்போதைய அமைச்சர் அருச்சுன் முண்டா ஆவார். இதன் இணை அமைச்சர்கள் ரேணுகா சிங் மற்றும் விஷ்வேஷ்வர் துடு ஆவார். இந்த அமைச்சகம் உருவாவதற்கு முன்னர் பழங்குடியினர் விவகாரங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அமைச்சகங்களால் கையாளப்பட்டது. இந்த அமைச்சகம் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு நாடு முழுவதும் 401 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை நடத்துகிறது.

பணிகள்[தொகு]

பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஒட்டுமொத்த கொள்கை திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சகமாகும். பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட பணிகள் பின்வருமாறு:

  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக காப்பீடு
  • பழங்குடியினர் நலன்: திட்டமிடல், திட்ட உருவாக்கம், ஆராய்ச்சி, மதிப்பீடு, புள்ளியியல் மற்றும் பயிற்சி
  • பழங்குடியினர் நலனில் தன்னார்வ முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
  • பட்டியல் பழங்குடியினரின் வளர்ச்சி

பங்களிப்புகள்[தொகு]

இந்த அமைச்சகத்தின் திட்டங்கள் மற்றும் பிற மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் ஓரளவு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதி உதவியின் மூலம் முயற்சிகளை ஆதரிப்பதற்கும் துணைபுரிவதற்கும், படடியல் பழன்குடியினர் நிலைமையைக் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்குள் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதற்கும் நோக்கமாக உள்ளது. முக்கியமான துறைகளில் பல்வேறு வளர்ச்சி தலையீடுகள் மூலம் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் அவர்களின் முயற்சிகளுக்கு அமைச்சகம் துணைபுரிகிறது. நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகின்றது. மேலும் திட்டங்கள் மாநில அரசுகள்/ஒன்றியப் பிரதேச நிர்வாகங்களால் செயல்படுத்தப்படுகிறது.

அமைப்பு[தொகு]

பழங்குடியினர் விவகார அமைச்சகம், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சரின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலின் கீழும், இரண்டு துணை அமைச்சர்களின் உதவியோடும் செயல்படுகிறது. அமைச்சகத்தின் நிர்வாகத் தலைவராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி செயலாளராக உள்ளார். அவருக்கு உதவியாக மூன்று இணைச் செயலாளர்கள் மற்றும் ஒரு பொருளாதார ஆலோசகர், நிதி ஆலோசகர் உள்ளார்கள்.

பணி/பார்வை[தொகு]

பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஒட்டுமொத்த கொள்கை, திட்டமிடல் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான திட்டங்களை ஒருங்கிணைக்கும் அமைச்சகமாகும். இதன் நடவடிக்கைகள்:

  • இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் தொடர்பான சமூக பாதுகாப்பு மற்றும் சமூக காப்பீடு.
  • பழங்குடியினர் நலன்: பழங்குடியினர் நலத் திட்டமிடல், திட்ட உருவாக்கம், ஆராய்ச்சி, மதிப்பீடு, புள்ளி விவரம் மற்றும் பயிற்சி.
  • பழங்குடியினர் நலனில் தன்னார்வ முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்.
  • பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்.[3]
  • வன நிலங்களில் வசிக்கும் பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பான சட்டம் உட்பட அனைத்து விஷயங்களும்.
  • பழங்குடியினரின் நலனுக்காக இன்றியமையாத திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
  • தேசிய பழங்குடியினர் ஆணையம்
  • குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 பிரிவு 22 மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் 1989 வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பிரிவு 33 கண்காணித்தல்.
  • நிதி ஆயோக் வடிவமைத்த கட்டமைப்பு மற்றும் பொறிமுறையின் அடிப்படையில் பழங்குடியினர் திட்டங்களைக் கண்காணித்தல்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MINISTRY OF TRIBAL AFFAIRS : DEMAND NO. 96" (PDF). Indiabudget.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 September 2018.
  2. Website of Ministry of Tribal Affairs, Government of India
  3. Scholarship Scheme

வெளி இணைப்புகள்[தொகு]