பஞ்சமர் இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈழத்து தாழ்த்தப்பட்ட மக்களின் ஆக்கங்கள், அவர்களின் பிரச்சினைகளை கருப்பொருளாக அல்லது முன்னிறுத்தும் ஆக்கங்கள் ஆகியவை ஈழத்து பஞ்சமர் இலக்கியம் எனலாம். சாதி, ஆதிக்க, சமய, அரசியல், சமூக கட்டமைப்புக்களின் தாக்கங்கள், அக்கட்டமைப்புக்களில் இருந்து மீட்சி, அக்கட்ட்மைப்புக்களை உடைப்பது அல்லது மாற்றியமைப்பது தொடர்பான சிந்தனைகளை தாழ்த்தப்பட்ட இலக்கியம் பிரதானமாக மையப்படுத்துகின்றது. மேலும் தழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதர மேன்படுத்தல், மாற்று சமூக கட்டமைப்பு வடிவங்கள், சமத்துவம் என்று தழ்த்தப்பட்ட இலக்கிய கருப்பொருள்கள் மேலும் விரியும். ஈழத்து சூழலில் அதனை மையப்படுத்து எழும் தழ்த்தப்பட்ட இலக்கியங்கள் பிற தழ்த்தப்பட்ட இலக்கியங்களில் இருந்து மாறுபட்டு நிற்கும்.
[தொகு] ஈழத்து தாழ்த்தப்பட்ட எழுத்தாளர்கள்
- கே. டானியல்
- எஸ். பொ
- லெ. முருகபூபதி
- டொமினிக் ஜீவா
- என். கே. ரகுநாதன்
- தெணியான்
- பெனடிக்ற் பாலன்
- நந்தினி சேவியர்
- தேவா
- அருந்ததி
- அ.தேவதாசன்
- மா. பாலசிங்கம்
[தொகு] ஈழத்து தாழ்த்தப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள்
- ஈழத்து தாழ்த்தப்பட்ட சிறுகதைகள் [1]