நாளிதழ்
நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.
பொருளடக்கம் |
காலமுறைப் பகுப்பு [தொகு]
அச்சில் வெளிவரும் நாளிதழ்கள் காலமுறையில் இரண்டாகப் பகுக்கப்படுகின்றன. காலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "காலை நாளிதழ்" என்றும் மாலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "மாலை நாளிதழ்" என்றும் அழைக்கப்படுகின்றன.
உள்ளடக்கம் [தொகு]
- நாளிதழ்கள் பொதுவாக அரசியல், வணிகம், குற்றம், பொழுதுபோக்கு, விளையாட்டு முதலிய பல துறைகள் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. தவிர நாளிதழ்கள் செய்திகள் அல்லாத வேறு பல அம்சங்களையும் கொண்டிருப்பது உண்டு. முக்கியமாக, ஆசிரியத் தலையங்கம், வாசகர் கடிதம், கேலிச் சித்திரங்கள், கதைகள், சோதிடம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
- மேற்குறிப்பிட்டவை மக்களுக்குத் தகவல்களையும், பொழுதுபோக்கையும் வழங்கக்கூடிய அம்சங்களாகும். இவற்றுக்காகவே மக்கள் நாளேடுகளைப் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள். இதனால் இவ்வாறு மக்கள் விரும்பும் அம்சங்களை வழங்குவதற்காக நாளிதழ்களை வெளியிடும் நிறுவனங்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்வதுண்டு. இவை தவிர நாளிதழ்களில் இடம்பெறும் சில அம்சங்களை வெளியிடுவதற்காக வெளியீட்டு நிறுவனங்கள் பணம் பெற்றுக் கொள்வதும் உண்டு. இவ்வாறான அம்சங்களில் முக்கியமானவை விளம்பரங்கள் ஆகும். இவற்றுள், உற்பத்திப் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த விழையும் வணிக விளம்பரங்கள், வேலைக்கு ஆட்களைத் தேடும் விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், இறப்பு அறிவித்தல்கள் என்பன அடங்கும். அதிக விற்பனையைக் கொண்ட நாளிதழ்கள் விளம்பரங்கள் மூலம் நல்ல வருமானம் பெறுகின்றன.
- பொதுவான நாளேடுகள் பல்வேறு வகையான வாசகர்களைக் கவர்வதற்காகத் தனியான அம்சங்களையும் வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான பகுதி, மாணவர்களுக்கான பகுதி, சினிமாப் பகுதி, வேளாண்மை, கலை, விளையாட்டுப் பகுதி போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில நாளிதழ்கள் குறிப்பிட்ட கிழமைகளில் மட்டும் இலவசமாக தனிஇதழ் ஒன்றையும் நாளிதழுடன் கூடுதலாக அளிக்கின்றன.
- நாளிதழ்கள் வாசித்தபின் அன்றே எறிந்துவிடக் கூடியவை என்பதால், நாளிதழ்களைப் பதிப்பிக்கும் தாள்கள் உயர்ந்த தரமுள்ளைவையாக இருக்கவேண்டியதில்லை. இதனால் குறைந்த தரம் கொண்ட தாள்களிலேயே நாளிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன. இத் தாள் பத்திரிகைத் தாள் எனப்படுகின்றது.
நிர்வாக அமைப்பு [தொகு]
சிறு நாளிதழ்கள் [தொகு]
- சிறிய நாளிதழ்களில் பொதுவாக இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை
- அலுவலகம்
- பணிப்பிரிவு
நடுத்தர நாளிதழ்கள் [தொகு]
- நடுத்தரமான நாளிதழ்களில் மூன்று முக்கியத் துறைகள் செயல்படுகின்றன.அவை
- வணிகப் பகுதி
- எந்திரப் பகுதி
- ஆசிரியர் பகுதி
-இவைகளை முன் பணியறை, பின் பணியறை, செய்தி அறை என்றும் அழைப்பதுண்டு.
=மெக்சிகோவில் எரிமலை வெடித்தது1
-7886 அடி உயரமுள்ள மெக்சிகன் புற நகரில் உல்ள எரிமலை நேற்று முன் தினம் காலை 5.05 மணிக்கு வெடித்தது.. எரிமலை அருகே உள்ள ஷிந்தியா என்ற கிராமத்தைச் சேர்ந்த -வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து 7 மைல் தொலைவில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். வெடிக்கத் தொடங்கிய 12 மணி நேரத்திற்கிள் 50 பஸ்கள் மூலம் -அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் எரிமலையைச் சுற்றிலும்போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜனசக்தி 22-04-2012
-65000 -மாவோயிஸ்டுகள் விருப்ப ஓய்வு பெற்றனர்.;-
-நேபாளத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஒருங்கிணந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் தாங்களாகவே விருப்ப ஓய்வு பெற்று - விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. -ஜனசக்தி 22-04-2012
பெரிய நாளிதழ்கள் [தொகு]
- நன்கு வளர்ச்சியடைந்த நாளிதழ்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை
- ஆசிரியப் பிரிவு
- வணிகப் பிரிவு
- எந்திரப் பிரிவு
- வளர்ச்சிப் பிரிவு
- புள்ளி விபரப் பிரிவு
- நிர்வாகப் பிரிவு
ஆசிரியப் பிரிவு [தொகு]
ஆசிரியப் பிரிவு கீழ்காணும் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.
- செய்தி அறை
- படி எடுக்கும் பகுதி
- தலையங்கப் பகுதி
- படப் பகுதி
- நூலகம்
வணிகப் பிரிவு [தொகு]
வணிகப் பிரிவு கீழ்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
- விளம்பரப் பகுதி
- விற்பனைப் பகுதி
- கணக்குப் பகுதி
எந்திரப் பிரிவு [தொகு]
எந்திரப் பிரிவு கீழ்காணும் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது.
- அச்சுக் கோர்க்கும் அறை
- அமைப்புப் பகுதி
- படங்களைச் செதுக்கும் பகுதி
- திருத்தும் பகுதி
- அச்சடிக்கும் பகுதி
(தற்போது கணினிமயமாகி விட்டதால் முதல் மூன்று பகுதிகளும் ஒரே பகுதியாக மாற்றம் பெற்று விட்டன. நான்காவது பகுதி அச்சிற்கு முன்பான அச்சுப்படி தயாரிப்பு பகுதியாக மாற்றமாகி விட்டது.)
வளர்ச்சிப் பிரிவு [தொகு]
நாளிதழ்களின் வளர்ச்சியைக் கவனிப்பதற்காக இந்தப் பகுதி செயல்படுகிறது. இவை விளம்பர முறையைப் பின்பற்றி நாளிதழின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், நாளிதழ்களில் சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு வாசகர்களைக் கவரவும் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
புள்ளி விபரப் பிரிவு [தொகு]
நாளிதழ் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்து அதன் வளர்ச்சிக்கு துணை செய்கிறது. வெளிநாடுகளில் இப்படி புள்ளி விபரங்களைச் சேகரித்து வகைப்படுத்தி தொகுத்து வைப்பதற்காகத் தனிப்பகுதியை வைத்துள்ளனர். (தற்போது கணினி வழியாக புள்ளி விபரங்கள் சேகரித்துத் தொகுத்து வகைப்படுத்தி வைக்கின்றனர்.)
நிர்வாகப் பிரிவு [தொகு]
நாளிதழின் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இப்பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவை நாளிதழின் உரிமையாளர் தலைமை ஏற்று நடத்துகிறார். இப்பிரிவில் பல நிர்வாக அதிகாரிகள் இருப்பார்கள். நாளிதழின் கொள்கையின்படி அனைத்துத் துறையினரும் செயல்படுகிறதா என இப்பிரிவில் கண்காணிக்கப்படுகிறது.