தே. கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தே. கிருஷ்ணன் (பிறப்பு ஏப்ரல் 30 1934) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் உரிமம் பெற்ற கடிதம் எழுத்துநராக கடமையாற்றி வருகின்றார். இவர் முன்னாள் ஆசிரியரும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1951 முதல் எழுதி வரும் இவர், சமூகம், கல்வி, உரிமை நிலை, மொழி, வரலாறு என நூற்றுக் கணக்கான விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இத்தகைய கட்டுரைகள் மலேசிய தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்[தொகு]

"கல்வித் துறையில் நம்மவர்கள்"

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1989)
  • செலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச எழுத்தாளர் சங்கப் பரிசு (1993)
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் 'சங்கப் பரிசு' (பலமுறை)
  • பாரதிதாசன் குழுவினரின் 'இலக்கியப் பரிசு' (பலமுறை).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._கிருஷ்ணன்&oldid=3217194" இலிருந்து மீள்விக்கப்பட்டது