தமிழ் மகளிர்
தமிழ் மகளிர் அல்லது தமிழ்ப் பெண்களின் அடையாளம், அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளை, பிரச்சினைகளை இந்த கட்டுரை முதன்மையாக அலசும்.
மனித வரலாற்றின் பெரும்பகுதியில் சமூகம் ஆண் ஆதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. 20ம் நூற்றாண்டிலேயே பெண்களின் எதிர்ப்புப் போராட்டத்தால் தமது சுகந்திரத்தையையும், உரிமைகளையும், வாய்ப்புக்களையும் பெற்று, முன்னேறி, சமனாக மதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. அதே வரலாற்று தோரணம் (patteern) தமிழ்ச் சமூகத்துக்கும் பெரிதும் பொருந்தும்.
இருப்பினும் இன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் கல்வியில், அரசியலில், தொழில் வாய்ப்பில் ஆண்களுக்கு இணையான வாய்ப்புக்களையோ அல்லது நிலையையோ பெறவில்லை.
பெண்களின் பிரச்சினைகள்[தொகு]
- பெண் சிசு கொலை
- சிறுவர் திருமணம்
- சீதனம்
- உடன்கட்டை ஏறல்
- மறுமண மறுப்பு
- சொத்துருமை மறுப்பு
- கொத்தடிமையாக்கல்
- கோயிலுக்கு அடிமையாக்கல், (தாசிகள்)