உடன்கட்டை ஏறல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடன்கட்டை ஏறல் என்பது ஒரு இந்து சமய சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி அவரின் சடலம் தீமூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. சில சமயங்களில் மனைவி தானாக முன்வந்து தீயில் அழிந்து கொள்ளலாம், பிற சமயங்களில் பிறர் அவரை வற்புறுத்தி உடன்கட்டை ஏற வைப்பர். இந்த சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ம் ஆண்டு சட்டத்துக் எதிரானதாக ஆக்கப்பட்டது.