தஞ்சாவூர் நாலுகால் மண்டப ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

தஞ்சாவூர் நாலுகால் மண்டப ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் நாலுகால் மண்டபம் அருகே அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

அய்யன்கடைத்தெருவின் சற்று மேடான பகுதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு எதிரில் நாலு கால் மண்டபம் உள்ளது. பெருமாள் கோயிலின் தேர்முட்டி கோயிலின் முன்பு இடப்புறம் இக்கோயில் அமைந்துள்ளது. [1]

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவர் இரண்டு அல்லது இரண்டரை அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ளார்.[1]

மூலவர் அமைப்பு[தொகு]

தஞ்சாவூரில் வாழ்ந்த சதாசிவ பிரஹ்மேந்திராள் என்பவரால் பெருமாள் கோயிலின் தேர்முட்டியில் இந்த ஆஞ்சநேயர் சிறிய அறையில் அமைக்கப்பட்டுள்ளார். கட்டிட அமைப்பை வைத்து கோயில் என்று கூற முடியாது. உள்ளூரில் உள்ளோர் இக்கோயிலை நன்கு அறிவர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், வாயுசுதா வெளியீடு, தில்லி 110 092