டுட்டிநாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டுட்டிநாமா( ஒரு கிளியின் கதைகள்)
நூலாசிரியர்நக்‌ஷபி
நாடுஇந்தியா
மொழிபாரசீகம்
வகைநீதிக்கதை

டுட்டிநாமா (நேரடி பொருள் "ஒரு கிளியின் கதைகள்") பாரசீக மொழியில் 52 கதைகள் கொண்ட 14 ஆம் நூற்றாண்டின் தொடர்கதையாகும். 1550 களில் முகலாயப் பேரரசர் அக்பரால் ஆணையிடப்பட்டு, ஆடம்பரமாக விளக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் கொண்ட, 250 சிறு ஓவியங்களைக் கொண்ட இதன் பதிப்பு,மிகவும் பிரபலமானது. கி.பி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷுகசப்ததி ( கதா இலக்கியத்தின் ஒரு பகுதி) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட சமஸ்கிருதத்தின் 'கிளியின் எழுபது கதைகள்' என்னும் முந்தைய தொகுப்பிலிருந்து திருத்தம் செய்யப்பட்டு கி.பி 14 ஆம் நூற்றாண்டில் பாரசீக உரை உருவாக்கப்பட்டது. இந்தியாவில், கிளிகள் (அவற்றின் நோக்கம் கொண்ட உரையாடல் திறன்களின் வெளிச்சத்தில்) புனைகதை படைப்புகளில் கதைசொல்லிகளாக பிரபலமாக உள்ளன.[1][2][3][4]

ஒரு கிளி, தனது பெண் உரிமையாளர் கோஜஸ்தா, கணவர் இல்லாத நேரத்தில் எந்தக் காதலனுடனும் தவறான உறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காக 52 இரவுகள் தொடர்ந்து கூறும் ஒழுக்கக் கதைகள் இவையாகும். கோஜஸ்தா எப்போதும் தன் காதலனைச் சந்திக்க வீட்டை விட்டு வெளியேறும் கட்டத்தில் இருக்கிறாள். கவர்ச்சிகரமான கதைகள் மூலம் விசுவாசமான கிளி அவளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியே இது.

முகலாயப் பேரரசர் அக்பர் 1556 இல் அரியணை ஏறிய ஐந்து ஆண்டுகளில்,[5] நீதிமன்றப் பட்டறையில் பணிபுரியும் இரண்டு பாரசீக கலைஞர்களான மிர் சயீத் அலி மற்றும் அப்துஸ் சமத் ஆகியோரால் செய்யப்பட்ட பல விளக்கப்பட கையெழுத்துப் பிரதிகளின்றளவும் எஞ்சியுள்ளன.[6] இதுமுழுதாக கிளீவ்லேண்ட் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. அக்பருக்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது பதிப்பு இப்போது பல அருங்காட்சியகங்களில் சிதறிக் காணப்படுகிறது. ஆனால் டப்ளினில் உள்ள செஸ்டர் பீட்டி நூலகத்தில் மிகப்பெரிய பகுதி உள்ளது. இது ஏறக்குறைய 1580 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது [7][8]

உரை[தொகு]

14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் உள்ள படாயுனுக்கு குடிபெயர்ந்த, பாரசீக சூஃபி துறவியான நக்ஷாபிக்கு டீடிநாமாவை எழுதியவர் என அறியப்படுகிறார். கி.பி. 1335 இல் டுட்டிநாமாவைப் போன்ற கதைகளின் தொன்மையான சமஸ்கிருத பதிப்பை பாரசீக மொழியில் அவர் மொழிபெயர்த்துள்ளார் மற்றும்/அல்லது திருத்தியுள்ளார். சிறுகதைகள் அடங்கிய இந்த சிறிய புத்தகம், கருப்பொருளில் அறநெறியைச் சார்ந்தது. அக்பரின் வளர்ச்சியின் போது அவரது தாக்கத்தை அடந்ததாக ஊகிக்கப்படுகிறது. அக்பருக்கு ஹரெம் (பெண்கள் உடன்பிறப்புகள், மனைவிகள் மற்றும் பெண் வேலையாட்கள்) இருந்ததால், ஒழுக்கக் கதைகள் பெண்களின் கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட நோக்குநிலையைக் கொண்டிருந்தன என்றும் ஊகிக்கப்படுகிறது.[9][10]

கதையின் கரு[தொகு]

டுட்டிநாமா (1556-1565) ஓவியங்களிலிருந்து ஒரு காட்சியாக கோஜஸ்தாவிடம் கிளி உரையாற்றுகிறது [11]

டுட்டிநாமாவின் 52 கதைகளின் முக்கிய வசனகர்த்தாவானது ஒரு கிளி. தனது கணவன் (மைமுனிஸ் என்ற வணிகர்) வியாபாரத்திற்காக வெளியூரில் இருக்கும் போது, தன் உரிமையாளரான கோஜஸ்தா என்ற பெண் தகாத உறவில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக, அவளிடம் கதைகளைச் சொல்கிறது. வணிகர் தனது வணிகப் பயணத்திற்கு தனது மனைவியை விட்டு ஒரு மைனா மற்றும் ஒரு கிளியுடன் சென்றிருந்தார். தகாத உறவில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியதற்காக மனைவி மைனாவின் கழுத்தை நெரித்தாள். சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த கிளி, அடுத்த ஐம்பத்திரண்டு இரவுகளில் கவர்ச்சிகரமான கதைகளை விவரிக்கும் ஒரு மறைமுக அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறது. கோஜஸ்தாவின் கவனத்தை ஈர்க்கவும், வெளியே செல்வதை திசைதிருப்பவும் ஒரு பொழுதுபோக்கு அத்தியாயமாக 52 இரவுகளுக்கு ஒவ்வொரு இரவிலும் கதைகள் விவரிக்கப்படுகின்றன.[12][13]

ஓவியங்களின் பாணி[தொகு]

கதக் பாணியில் நடனமாடும் முகலாய பெண்கள்

டுட்டிநாமாவின் உரை நாஸ்டாலிக் கையெழுத்துப் பாணியில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நூலகங்களில் காணப்படும் ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒரு தலைப்பில் அல்லது கதைகளின் அத்தியாயத்தில் கவனம் செலுத்துகின்றன. ஓவியங்களில் காணப்படும் நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகள் முகலாய காலத்திற்கு முந்தைய ஓவியங்களின் தாக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம். டுட்டிநாமாவின் பல பக்கங்கள் மால்வா கையெழுத்துப் பிரதிகளைப் போலவே விளக்கப்படங்களுடன் (கி.பி. 1439 தேதியிட்டது) தனித்துவமான முழுமையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. டுட்டிநாமா ஓவியங்களில் உள்ள ரசனையான வண்ணங்களில் வித்தியாசம் கண்டறியப்படுகிறது. இது தரப்படுத்தப்பட்ட வண்ணங்களினால் நிறம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.[13][14][15]

இந்திய மற்றும் பாரசீக வடிவங்களின் கலவையாகக் கருதப்படும் கதக்கின் பிரபலமான நடன வடிவமானது, டுட்டிநாமா, அக்பர்நாமா மற்றும் தர்ரிக்-இ-கந்தன்-இ-திமூரியா ஆகியவற்றின் ஓவியங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களில், ஆண்களும் பெண்களும் நீண்ட அங்கிகளையும், உயர்ந்த கூம்புத் தொப்பிகளையும் அணிந்திருப்பதைக் காட்டியுள்ளனர். சில ஓவியங்கள் இரண்டு வெவ்வேறு நடனக் குழுக்களையும் கூட சித்தரிக்கின்றன. ஈரானில் இருந்து அக்பரின் அரசவைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட 350 நடனக் கலைஞர்கள், ஈரானின் பண்டைய நடன மரபுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, பாரசீக மற்றும் இந்திய மக்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து, இந்தியாவில் தற்போதைய கதக் நடன பாணிக்கு பின்னணியை வழங்கியது என்று ஊகிக்கப்படுகிறது.[16]

குறிப்புகள்[தொகு]

  1. Beach (1992), 21–38
  2. name="Thane">"Institute for Oriental Study, Thane: Seminar on "Suhbashita, Panchatantra & Gnomic Literature in Ancient & Medieval India"". Effect of this Migration on Art. Archived from the original on 2012-08-20. பார்க்கப்பட்ட நாள் 2009-09-25.
  3. name="Haksar">A N D Haksar. "Shuka Saptati – Seventy Tales of the Parrot". Archived from the original on 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
  4. name="chapatti">"The Parrot". Archived from the original on 2018-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21.
  5. Beach (1992), 34
  6. Beach (1992), 28-29
  7. Losty, 32
  8. name="Nastaliq">"Nasta'liq calligraphy as patronized by Akbar, c.1580". பார்க்கப்பட்ட நாள் 2009-09-25.
  9. "Institute for Oriental Study, Thane: Seminar on "Suhbashita, Panchatantra & Gnomic Literature in Ancient & Medieval India"". Effect of this Migration on Art. Archived from the original on 2012-08-20. பார்க்கப்பட்ட நாள் 2009-09-25."Institute for Oriental Study, Thane: Seminar on "Suhbashita, Panchatantra & Gnomic Literature in Ancient & Medieval India"". Effect of this Migration on Art. Archived from the original on 2012-08-20. Retrieved 2009-09-25.
  10. "The Parrot". Archived from the original on 2018-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-09-21."The Parrot" பரணிடப்பட்டது 2018-12-01 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2009-09-21.
  11. "Collections".
  12. Beach (1992), 21
  13. 13.0 13.1 "Nasta'liq calligraphy as patronized by Akbar, c.1580". பார்க்கப்பட்ட நாள் 2009-09-25."Nasta'liq calligraphy as patronized by Akbar, c.1580". Retrieved 2009-09-25.
  14. The Empire of the great Mughals: history, art and culture. https://archive.org/details/empireofgreatmug00anne. பார்த்த நாள்: 2009-09-23. 
  15. Art and culture: felicitation volume in honour of Professor S. Nurul Hasan. https://books.google.com/books?id=N4BuAAAAMAAJ&q=Tutinama%27%27%27. பார்த்த நாள்: 2009-09-24. 
  16. "The Colosseum". Archived from the original on 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2009-09-25.

மேற்கோள்கள்[தொகு]

  • பீச், மிலோ கிளீவ்லேண்ட் (1992), முகலாயர் மற்றும் ராஜ்புத் ஓவியம், பகுதி 1, தொகுதி 3, கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ், 1992 (பக். 21–38), கூகுள் புக்ஸ்
  • பீச், மிலோ கிளீவ்லேண்ட் (1987), ஆரம்பகால முகலாய ஓவியம், ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், 1987 (பக். 51–54),பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674221857, google books
  • லாஸ்டி, ஜேபி ராய், மாலினி (பதிப்புகள்), முகலாய இந்தியா: கலை, கலாச்சாரம் மற்றும் பேரரசு, 2013, பிரித்தானிய நூலகம்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0712358706, 9780712358705
  • ஸ்டீபன், ஏ. காண்டி மற்றும் ஜியா அல்-தின் நக்ஷபி. ஒரு கிளியின் விசித்திரக் கதைகள் . லண்டன்: இ.நிஸ்டர், 1892.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுட்டிநாமா&oldid=3925156" இலிருந்து மீள்விக்கப்பட்டது