ஜீயபுரம்

ஆள்கூறுகள்: 10°52′24″N 78°36′16″E / 10.873435°N 78.6044057453°E / 10.873435; 78.6044057453
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீயபுரம் (Jeeyapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமமாகும்.

வேளாண்மை[தொகு]

விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் காவிரி ஆற்றின் அருகே ஜீயபுரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாரம்பரியமாகப் பல விவசாய நிலங்களும் விவசாயிகளும் உள்ளனர். ஜீயபுரத்தில் நெல், வாழை, பருத்தி மற்றும் உளுந்து முதலியன முக்கிய விவசாயப் பயிர்களாகப் பயிரிடப்படுகின்றன.

கோயில்கள்[தொகு]

இக்கிராமத்தைச் சுற்றிப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் உள்ளன. குறிப்பாக ஸ்ரீசந்திரசேகர சுவாமி கோயில் [1] மற்றும் எலம்புலியம்மன் கோயில். பெரியகருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்ற சக்திவாய்ந்த கோயிலாகும்.

சுற்றுலா இடங்கள்[தொகு]

முக்கொம்பு இதன் அருகில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.findmytemple.com/en/trichy/t30-chandrasekhara-swamy,-jeeyapuram
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீயபுரம்&oldid=3082089" இலிருந்து மீள்விக்கப்பட்டது