ஜி. ஜான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. ஜான்சன் (பிறப்பு: டிசம்பர் 20 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தரணி மைந்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வைத்தியராவார். மேலும் ஜோகூர் மாநிலத் தமிழ் நேசன் இலக்கியப் பேரவையின் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நெடுங்கதை, கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் தினமுரசு நாளிதழிலும், தமிழ் நேசன் நாளிதழிலும் மருத்துவக் கேள்வி - பதில் எழுதி வருகிறார்.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • டத்தோ பத்மநாதன் இலக்கிய விருது (1994)
  • கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பல பரிசுகள் பெற்றதுண்டு.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ஜான்சன்&oldid=3213878" இலிருந்து மீள்விக்கப்பட்டது