சோகாவல் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோகாவல் வட்டம், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி மாவட்டத்திலுள்ள 5 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட சோகாவல் ஆகும். இந்நகரம் அயோத்தியிலிருந்து 25 தொலைவில் உள்ளது. இவ்வட்டம் பதர்சா பேரூராட்சி உள்ளிட்ட 148 கிராமங்களைக் கொண்டது.[1]இவ்வட்டத்தின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.

சோகாவல் வட்டத்தில் உள்ள தன்னிபூர் கிராமத்தில், இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக புதிய அயோத்தி மசூதி டிசம்பர் 2021 முதல் கட்டப்பட்டு வருகிறது.[2][3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 64,415 வீடுகள் கொண்ட சோகாவல் வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 3,85,818 ஆகும். அதில் ஆண்கள் 1,96,689 மற்றும் பெண்கள் 1,89,129 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். 96.6% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 99,254 மற்றும் 43 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.37%, இசுலாமியர் 17.24%, பௌத்தர்கள் , சமணர்கள், சீக்கியர்கள் , கிறித்தவர்கள் 0.13% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[4] [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகாவல்_வட்டம்&oldid=3616649" இலிருந்து மீள்விக்கப்பட்டது