சு. வேலுப்பிள்ளை
சு. வேலுப்பிள்ளை (சு.வே) | |
---|---|
பிறப்பு | 24 மே 1921 |
இறப்பு | சூன் 22, 2007 வெள்ளவத்தை, கொழும்பு | (அகவை 86)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | தமிழாசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | தையல்நாயகி, சுப்பிரமணியம் |
சு.வே என அழைக்கப்படும் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை (24 மே 1921 – 22 சூன் 2007) இலங்கையின் சிறப்புமிக்க உருவகக்கதை எழுத்தாளரும் நாடகாசிரியரும் தமிழ்ப் பண்டிதரும் ஆவார்.[1][2]
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
வேலுப்பிள்ளை யாழ்ப்பாணம், நாவற்குழியில் சுப்பிரமணியம், தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை இலங்கையின் டிக்கோயா, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்தவர்.
சிறுகதைகள்[தொகு]
சு.வேயின் முதல் சிறுகதை 'கிடைக்காத பலன்' 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. சு.வே யின் சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. இவரது உருவகக்கதைகள் 1999 இல் மித்ர வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன.
நாடகத்துறை[தொகு]
1965 இல் இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் இவரது 'வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. அடுத்த ஆண்டும் இவரது 'எழிலரசி' என்ற முழுநீள நாடகம் முதல் பரிசு பெற்றது.
வானொலி நாடகங்கள்[தொகு]
1960 இல் இலங்கை வானொலி நாடகப்போட்டியில் இவரது 'மண் வாசனை'க்கு முதல் பரிசு கிடைத்தது. 1968 இல் 'ஒருமை நெறித்தெய்வம்' என்ற நாடகம் பரிசு பெற்றது. சு.வே வானொலி கிராம சேவைக்கு பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதினார்.
- ஏட்டிலிருந்து (1964) - 14 வாரங்கள்
- கிராமராஜ்யம் (1964) - 32 வாரங்கள்
- பொன்னாச்சிக் குளம் (1967-68) -97 வாரங்கள்
- நவயுகம் (1969)- 12 வாரங்கள்
வெளிவந்த நூல்கள்[தொகு]
- மண் வாசனை - (12 சிறுகதைகளின் தொகுதி)
- பாற் காவடி - சிறுகதைத் தொகுதி
- மணற்கோவில் - உருவகக் கதைகள் (மித்ர பதிப்பகம்)
- சிறுவர் கதை இலக்கியம்
செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட ஈழகேசரி சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் இவருடைய சிறுகதைகள் சில இடம்பெற்றுள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "சு.வேலுப்பிள்ளை 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
- ↑ "உருவகக் கதை கலையின் பிதாமகன் சு.வேலுப்பிள்ளை (சு.வே)".