சு. வேலுப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. வேலுப்பிள்ளை
(சு.வே)
பிறப்பு(1921-05-24)24 மே 1921
இறப்புசூன் 22, 2007(2007-06-22) (அகவை 86)
வெள்ளவத்தை, கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிதமிழாசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்தையல்நாயகி,
சுப்பிரமணியம்

சு.வே என அழைக்கப்படும் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை (24 மே 1921 – 22 சூன் 2007) இலங்கையின் சிறப்புமிக்க உருவகக்கதை எழுத்தாளரும் நாடகாசிரியரும் தமிழ்ப் பண்டிதரும் ஆவார்.[1][2]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

வேலுப்பிள்ளை யாழ்ப்பாணம், நாவற்குழியில் சுப்பிரமணியம், தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை இலங்கையின் டிக்கோயா, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்தவர்.

சிறுகதைகள்[தொகு]

சு.வேயின் முதல் சிறுகதை 'கிடைக்காத பலன்' 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. சு.வே யின் சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. இவரது உருவகக்கதைகள் 1999 இல் மித்ர வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன.

நாடகத்துறை[தொகு]

1965 இல் இலங்கை கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் இவரது 'வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. அடுத்த ஆண்டும் இவரது 'எழிலரசி' என்ற முழுநீள நாடகம் முதல் பரிசு பெற்றது.

வானொலி நாடகங்கள்[தொகு]

1960 இல் இலங்கை வானொலி நாடகப்போட்டியில் இவரது 'மண் வாசனை'க்கு முதல் பரிசு கிடைத்தது. 1968 இல் 'ஒருமை நெறித்தெய்வம்' என்ற நாடகம் பரிசு பெற்றது. சு.வே வானொலி கிராம சேவைக்கு பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதினார்.

  • ஏட்டிலிருந்து (1964) - 14 வாரங்கள்
  • கிராமராஜ்யம் (1964) - 32 வாரங்கள்
  • பொன்னாச்சிக் குளம் (1967-68) -97 வாரங்கள்
  • நவயுகம் (1969)- 12 வாரங்கள்

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • மண் வாசனை - (12 சிறுகதைகளின் தொகுதி)
  • பாற் காவடி - சிறுகதைத் தொகுதி
  • மணற்கோவில் - உருவகக் கதைகள் (மித்ர பதிப்பகம்)
  • சிறுவர் கதை இலக்கியம்

செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட ஈழகேசரி சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் இவருடைய சிறுகதைகள் சில இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சு.வேலுப்பிள்ளை 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  2. "உருவகக் கதை கலையின் பிதாமகன் சு.வேலுப்பிள்ளை (சு.வே)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._வேலுப்பிள்ளை&oldid=3449233" இலிருந்து மீள்விக்கப்பட்டது