சுக. சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. சுப்பிரமணியம் (பிறப்பு: அக்டோபர் 2 1935) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். சுக. சுப்ரமணியம் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சமய, சமுதாயக் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்: தொகுப்புகள்[தொகு]

  • "திருமுருகன் பாமாலை" (1993);
  • "கதம்பமாலை" (1996);
  • "ஜொஹொர் பாரு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய திருக்குட நன்னீராட்டு விழா மலர்" (1996).

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • அரசாங்க PIS விருது(1980)
  • தமிழாசிரியர் சேவைக்காகத் "தொண்டர்மணி" விருது (1990)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக._சுப்ரமணியம்&oldid=3245131" இலிருந்து மீள்விக்கப்பட்டது