சிலுவைப் போர்கள்
சிலுவைப் போர்கள் என்பன, வெளி எதிரிகளுக்கும், உள் எதிரிகளுக்கும் எதிராகப் பெரும்பகுதி கிறிஸ்தவ ஐரோப்பா நடத்திய பல தொடர்ச்சியான போர்கள் ஆகும். மதம் சார்ந்த இப்போர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டது எனினும், சிலாவியர்கள், யூதர், ரஷ்ய மற்றும் கிரேக்க பழமைக் கோட்பாட்டுக் கிறிஸ்தவர்கள், மங்கோலியர், காத்தார்கள், ஹுசைட்டுகள், வால்டென்சியர்கள், பழம் பிரஸ்சியர்கள், பாப்பாண்டவரின் அரசியல் எதிரிகள் போன்றோருக்கு எதிராகவும் போர்கள் இடம்பெற்றன.
சிலுவைப் போர்கள் தொடக்கத்தில் ஜெரூசலத்தையும், புனித நிலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீளக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டிருந்ததுடன், அனத்தோலியாவுக்குள், முஸ்லிம் செல்யூக் துருக்கியர் நுழைவதைத் தடுப்பதற்கான கிழக்கத்திய பழமைக் கோட்பாட்டு பைசண்டியப் பேரரசின் வேண்டுகோளை ஏற்றுப் போர் தொடுக்கப்பட்டது. சிலுவைப் போர் என்னும் பெயர் இதற்குப் பின்னர் லேவன்ட்டுக்கு வெளியே பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட போர்களையும் குறிக்கப் பயன்பட்டது.
சிலுவைப் போர்கள் நீண்டகால அரசியல், பொருளியல், சமூகத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. இவற்றுட் சில அண்மைக்காலம் வரை நீடித்தன. கிறிஸ்தவ இராச்சியங்கள், அரசியல் சக்திகள் மத்தியில் இருந்த உள் முரண்பாடுகளினால், சில சிலுவைப் போர்களின் தொடக்க இலக்கு த்சி திரும்பியது. நான்காவது சிலுவைப் போர் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இது, கிறிஸ்தவ கொன்ஸ்டண்டினோப்பிள் அழிவதற்கும், பைசண்டியப் பேரரசு பிரிக்கப்படுவதற்கும் காரணமாகியது. ஆறாவது சிலுவைப் போரே பாப்பாண்டவரின் அதிகாரபூர்வ ஆசியில்லாமல் நடைபெற்ற முதல் போராகும். ஏழாம், எட்டாம், ஒன்பதாம் சிலுவைப் போர்களில், மாம்லுக், ஹாப்சிட் வெற்றிகள் கிடைத்தன. ஒன்பதாம் சிலுவைப் போரே இறுதிச் சிலுவைப்போர் ஆகும். இது மையக்கிழக்கில் முடிவடைந்தது.
சிலுவை யுத்தத்தின் விளைவுகள்[தொகு]
சிலுவை யுத்தத்தின் மூலம் கிழக்குத் தேசத்தைக் காலனித்துவப்படுத்தும் முயற்சியில் சிலுவை வீரர்கள் தோல்வியடைந்தனர். என்றாலும் அவர்கள் இவ் யுத்தத்தின் விளைவாக முஸ்லிம்களிடமிருந்து கல்வி, கலாசார, மத, சமூக ரீதியான பல பயன்பாடுகளைப் பெற்றுக் கொண்டனர். இது பற்றி சில பிரெஞ்சு வரலாற்றாசிரியர்களும் எழுதியுள்ளனர்.ஐரோப்பாவின் கலாசார வளர்ச்சிக்கு சிலுவை யுத்தங்கள் மகத்தான பங்களிப்பினை வழங்கியுள்ளன. சிலுவை வீரர்கள் முஸ்லிம்களிடமிருந்து பெற்று வந்த கலாசார விழுமியங்கள் அவர்களை நாட்டுப்புற வாழ்க்கையிலிருந்து விடுபட வைத்தன. சிலுவை யுத்தத்திற்கு முன்பிருந்தே முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக் கொண்ட கலாசார அம்சங்களை நீண்ட நாட்களாக ஐரோப்பியர் பேணிப் பின்பற்றி வந்துள்ளனர்.
வெளி இணைப்புகள்[தொகு]
