காஞ்சிரோட்டு யட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிரோட்டு யட்சி (ஸ்ரீதேவி) ஒரு நாட்டுப்புறக் காட்டேரியாகக் கருதப்படுகிறார். தொன்மக் கதைகளின் படி, அவர் தெற்கு திருவிதாங்கூரில் (இப்போது தமிழ்நாட்டில் ஒரு பகுதி) காஞ்சிராக்கோடு மங்களத்து என்ற பெயரில் ஒரு வசதியான படமங்கலம் நாயர் தாராவாட்டில் பிறந்தார். ஸ்ரீதேவி ஓர் பாலியல் தொழில் புரிபவர் என்பதால் ராஜா ராம வர்மாவின் மகன் மற்றும் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் போட்டியாளரான ராமன் தம்பியுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். கதையின் படி, அவள் தன் ஊழியரால் கொலை செய்யப்பட்டு, அவள் ஆண்களைத் தனது அழகைக் கொண்டு வழிநடத்தி, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்ற ஒரு யட்சி னியாக மாறினாள், (இது மலையாள நாட்டுப்புறக் கதைகளில் உள்ள தொன்மவியல் மனிதர்களின் ஒரு வகை). [1]

மங்களத்து ஸ்ரீதேவி[தொகு]

ஸ்ரீதேவி ஒரு வேசி, அவர் தனது வாடிக்கையாளர்களாக உயர்ந்த மற்றும் வலிமைமிக்கவர்களைக் கொண்டிருந்தார். ஆனால் அவள் பல ஊழியர்களில் ஒருவரான ராமனுடன் மோகம் கொண்டிருந்தாள். ராமன், ஒரு பாண்டன் நாயர் (பல்லக்குத் தாங்கி), ஒரு நல்ல உயரமான, நன்கு கட்டுடல் கொண்ட, அழகான இளைஞன். அவளும் அவளுடைய சகோதரர் கோவிந்தனும் ராமனின் முதுகில் பல்லக்கில் அமர்ந்து அருகிலுள்ள இடங்களுக்குச் செல்வது வழக்கம். ஸ்ரீதேவி ராமனை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து மகிழ்ந்தார். அவனை மனைவியிடமிருந்து பிரிக்க முடிந்த அனைத்தையும் அவள் செய்தாள்.

காலப்போக்கில், திருமணமாகாத கோவிந்தனும் ராமனும் ஆழ்ந்த நெருங்கிய நண்பர்களாக மாறினர். அவர்கள் பெரும்பாலும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டனர். ஸ்ரீதேவி தனது காதலனுடன் தன் சகோதரன் கொண்டிருக்கும் பாசத்தை விரும்பவில்லை. ஆனால் அவள் நடிக்கவில்லை.

ஸ்ரீதேவி ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி ராமனின் மனைவியை அவனிடமிருந்து பிரித்தார். ஒருமுறை கோவிந்தன் ராமனின் முதுகில் பயணித்தபோது ஸ்ரீதேவியின் இந்தச் முன்னாள் சதித்திட்டத்தின் விவரங்களை வெளியிட்டார். சில நாட்கள் கழித்து, ராமன் ஒருநாள் ஸ்ரீதேவியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்போது ஸ்ரீதேவியை கழுத்தை நெரித்துக் கொன்றார். கோவிந்தன் குற்றத்தைப் பார்த்து கண்மூடித்தனமாக தனது நண்பனைப் பாதுகாத்தார்.

பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஸ்ரீதேவி காஞ்சிரக்கோட்டில் ஒரு பெற்றோருக்கு பழிவாங்கும் யக்ஷியாக மறுபிறவி எடுத்தார். அவள் பிறந்ததது முதலே ஒரு மயக்கும் அழகியாக வளர்ந்தாள். அவள் பல ஆண்களை மயக்கி, அவர்களின் இரத்தத்தை குடித்தாலும், அவள் மனது தன் முன்னாள் காதலன் அழகான ராமன் மீது வைக்கப்பட்டது. அவர் தன்னை திருமணம் செய்தால் அவருக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அவரிடம் கூறினாள். ஆனால் ராமன் மறுத்துவிட்டார். யட்சி அவனைத் துன்புறுத்துவதில் அவளுடைய எல்லா ஆற்றல்களையும் செலவு செய்தார். பேரழிவிற்கு ஆளான ராமன் பலராமரின் சிறந்த உபசாகராக இருந்த மங்களத்து கோவிந்தனின் உதவியை நாடினார். கோவிந்தன் யக்சியுடன் ஒரு சமரசத்திற்கு முன்வந்தார். அவர் மூன்று நிபந்தனைகளுக்கு இணங்கினாள். அதன் படி, முதலாவதாக யக்சி ஒரு வருடத்திற்கு ராமனுடன் இருக்க முடியும். . ஒரு வருடம் கழித்து ஒரு கோவில் நிறுவப்படுவதற்கு அவள் ஒப்புக் கொள்ள வேண்டும். இரண்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் அழிக்கப்படும், பின்னர் அவள் மோட்சம் அடைவதற்காக பகவான் நரசிம்மரை சரணாகதி அடைய வேண்டும். மூன்று, அவள் கோவிந்தனுக்காகவும், ராமனுனின் மற்றும் அவனுடைய உறவினர்களுக்காகவும் அவர்களின் தற்போதைய பிறப்பில் மட்டுமல்ல, அடுத்தடுத்த பிறப்புகளிலும் வேண்ட வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று யட்சி 'பொன்னும் விலக்கும்' மீது சத்தியம் செய்தார். இவ்வாறு சமரச சூத்திரம் செயல்படுத்தப்பட்டது. [2]

காஞ்சிரக்கோட்டு வலியவீடு கோயில்[தொகு]

ஒரு வருடம் கழித்து, யட்சி க்கு ஒரு கோவிலில் நிறுவப்பட்டது, பின்னர் அது காஞ்சிரக்கோட்டு வலியவீட்டிற்குச் சொந்தமானது. வலியவீடு உறுப்பினர்கள் தங்கள் குல தெய்வங்களான ராமானுஜர் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ ருக்மிணியுடன்) மற்றும் பலராமர் ஆகியோருடன் இந்த யக்ஷியையும் வணங்கத் தொடங்கினர். [3] மீனம் மாதத்தில் பூரம் நாளன்றும் மீனம் தவிர ஒவ்வொரு மலையாள மாதத்திலும் முதல் வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் யட்சி அம்மாவுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.[4] தற்பொழுது இந்த யட்சிக்குக் கோயில் இல்லை.

காஞ்சிரோட்டு யட்சி மற்றும் ஸ்ரீ பத்மநாபசாமி கோயில்[தொகு]

தெக்கேடம் இறைவன் நரசிம்மரிடம் தஞ்சம் புகுந்த பின்னர், யட்சி இப்போது ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் கல்லாரா பி யில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இளவரசி அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாயி , "அவளுடைய அமைதியைக் குலைப்பது ஒரு பேரழிவாக இருக்கும், குறிப்பாக அவளுடைய தற்போதைய அமைதியான மனோபாவம் ஒரு காலத்தில் அவளுக்கு இருந்த அச்சுறுத்தும் தன்மைக்கு திரும்பிவிடும்." எனக் குறிப்பிடுகிறார்.[5] இந்த யட்சி யின் மயக்கும் மற்றும் மூர்க்கமான வடிவங்கள் ஸ்ரீ பத்மநாபசாமி சன்னதியின் தென்மேற்கு பகுதியில் வரையப்பட்டுள்ளன.

சுந்தர லட்சுமி[தொகு]

மகாராஜா சுவாதித் திருநாள் ராம வர்மாவின் மனைவியும் திறமையான நடனக் கலைஞருமான சுந்தர லட்சுமி, காஞ்சிரோட்டு யட்சி அம்மாவின் தீவிர பக்தராவார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Kaimal, Kesava. 'Thekkan Thiruvithamkurile Yakshikal'. Srinidhi Publications, 2002.
  2. Nair, Balasankaran. 'Kanjirottu Yakshi'. Sastha Books, 2001.
  3. Nair, Balasankaran. 'Kanjirottu Yakshi'. Sastha Books, 2001.
  4. Nair, Balasankaran. 'Valiaveedu Charithrathil'. Sastha Books, 1999.
  5. Bayi, Aswathi Thirunal Gouri Lakshmi. 'Sree Padmanabha Swamy Temple' (Third Edition). Bharatiya Vidya Bhavan, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிரோட்டு_யட்சி&oldid=2945854" இலிருந்து மீள்விக்கப்பட்டது