எல். இராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். இராமமூர்த்தி என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்கரை ஆண்டு காலம் இயக்குநர் பொறுப்பிலிருந்தவர். தற்போது மொழியியல் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் 2 நூல்களையும், தமிழில் 3 நூல்களையும் என 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "தமிழ் இலக்கியங்கள் கட்டவிழ்ப்பும் கூட்டமைப்பும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._இராமமூர்த்தி&oldid=3614077" இலிருந்து மீள்விக்கப்பட்டது