இந்தியாவில் கருக்கலைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் கருக்கலைப்பு (Abortion in India) என்பது கர்ப்பகால மருத்துவ சட்டம் 1971 பரணிடப்பட்டது 2021-07-23 at the வந்தவழி இயந்திரம் என்பதன் கீழ் சட்டப்பூர்வமாக்கப்பட்டதனை குறிப்பதாகும். பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான கருக்கலைப்பு சேவைகளை பெண்கள் அணுகும் வகையில் இந்தச் சட்டம் 2003 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. [1]

2021 ஆம் ஆண்டில், எம்டிபி திருத்தச் சட்டம் 2021 ஆனது 1971 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட எம்டிபி சட்டத்தில் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது, கருத்தடை தோல்வி, கருக்கலைப்பு வரம்பை 24 வாரங்களாக அதிகரித்தல் கருவளர் காலத்திற்கு 20 வாரங்கள் வரை தேவை ஆகிய மாற்றங்கள் அதில் இருந்தன. [2]

ஒரு சேவை வழங்குநரிடம், ஒரு பெண் தானாகவே முன்வந்து கருக்கலைப்பு செய்ய விரும்புவது தூண்டப்பட்ட கருக்கலைப்பு என்று அழைக்கப்படுகிறது. [3] தன்னிச்சையான கருக்கலைப்பு [3] என்பது 20 வது வாரத்திற்கு முன் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை இழப்பதனைக் குறிக்கிறது. அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலியினை பெண்களுக்குத் தருகிறது. பொதுவான மொழியில், இது கருச்சிதைவு என்று அழைக்கப்படுகிறது.

2017 வரை, கருக்கலைப்பு பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பற்றது என்று இருவகைப்பட்ட வகைப்பாடு இருந்தது. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என்பது பின்வருமாரு [4] உலக சுகாதார அமைப்பினால் வரையறுக்கப்பட்டது "தேவையான பயிற்சி இல்லாத அல்லது குறைந்தபட்ச மருத்துவத் தரங்கள் இல்லாத சூழலில் கர்ப்பம் கலைக்கப்படுவதற்கான ஒரு செயல்முறை ஆகும்." கருக்கலைப்பு தொடர்பான தொழில்நுட்பம் இப்போது பாதுகாப்பானதாக மாறியுள்ள நிலையிலும், இது பாதுகாப்பான, குறைவான பாதுகாப்பான மற்றும் மிகக் குறைந்தபட்ச பாதுகாப்பு எனும் மூன்று அடுக்கு வகைப்படுத்தலால் மாற்றப்பட்டது.

து பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் அபாயகரமான பெருகிய முறையில் பரவலான மாற்றாக இருக்கும் பல்வேறு சூழ்நிலைகளின் ஸ்பெக்ட்ரம் பற்றிய நுணுக்கமான விளக்கத்தை அனுமதிக்கிறது. முறையான சுகாதார அமைப்புக்கு வெளியே மிசோப்ரோஸ்டால் உபயோகிக்கும் ஆக்கிரமிப்பு முறைகள்.

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டம்[தொகு]

1971 க்கு முன் (இந்திய தண்டனைச் சட்டம், 1860)[தொகு]

1971 க்கு முன்பு, கருக்கலைப்பு இந்திய தண்டனைச் சட்டம், 1860, பிரிவு 312 இன் கீழ் குற்றமாக கருதப்பட்டது, [5] இது வேண்டுமென்றே "கருச்சிதைவை ஏற்படுத்துகிறது என்று விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. [6] ". பெண்ணின் உயிரைக் காப்பாற்ற கருக்கலைப்பு செய்யப்பட வேண்டிய வழக்குகளைத் தவிர, இது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது. மேலும், பெண்கள்/வழங்குநர்கள், என யார் தானாக முன்வந்து கருச்சிதைவு செய்தாலும் அவர்களுக்கு[7] மூன்று ஆண்டுகள் சிறை மற்றும்/அல்லது அபராதம், அல்லது ஏழு வருட சிறை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படும்.

1960 களில், 15 நாடுகளில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக இருந்தபோது, இந்தியாவில் தூண்டப்பட்ட கருக்கலைப்புக்கான சட்ட கட்டமைப்பின் மீதான விவாதங்கள் தொடங்கப்பட்டன. அதிகரித்து வரும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தை (MoHFW) எச்சரிக்கை செய்துள்ளது. [8] இதை நிவர்த்தி செய்வதற்காக, இந்திய அரசு கருக்கலைப்பு சட்டத்தை வரைவதற்கான பரிந்துரைகளை கொண்டு வருவதற்காக [8] இக்குழுவின் பரிந்துரைகள் 1970 ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன [8]

ஷா குழுவின் சிறப்பம்சங்கள்[தொகு]

ஷா குழு 1964 இல் இந்திய அரசால் நியமிக்கப்பட்டது. இந்தக் குழு கருக்கலைப்பின் சமூக-கலாச்சார, சட்ட மற்றும் மருத்துவ அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தது. கருணை மற்றும் மருத்துவ அடிப்படையில் பெண்களின் உடல்நலம் மற்றும் உயிர்களை வீணாக்குவதைத் தடுக்க 1966 ஆம் ஆண்டு குழு தனது அறிக்கையில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க பரிந்துரைத்தது. அறிக்கையின்படி, 500 மில்லியன் மக்கள்தொகையில், வருடத்திற்கு 6.5 மில்லியன் - 2.6 மில்லியன் தன்னிச்சையான கருக்கலைப்பும் மற்றும் 3.9 மில்லியன் தூண்டப்பட்ட கருக்கலைப்புகளும் ஏற்படுவதாக கூறினர்.

இந்தியாவில் கருக்கலைப்பு மதிப்பீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2002-ல் தூண்டப்பட்ட கருக்கலைப்பு பற்றிய பெரிய அளவிலான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆய்வுகள் இந்தியாவில் ஆண்டுதோறும் 6.4 மிலியன் கருக்கலைப்பு செய்யப்படுவதாக கூறியுள்ளது. [9]

சான்றுகள்[தொகு]

  1. "MTP ACT, 1971 | Ministry of Health and Family Welfare | GOI". main.mohfw.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  2. "The Gazette of India", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-06, பார்க்கப்பட்ட நாள் 2021-07-05
  3. 3.0 3.1 "Pratigya Campaign – Media Kit Glossary" (PDF). Pratigya – Campaign for Gender Equality and Safe Abortion. 20 June 2018. Archived from the original (PDF) on 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
  4. Ganatra, Bela; Gerdts, Caitlin; Rossier, Clémentine; Johnson, Brooke Ronald; Tunçalp, Özge; Assifi, Anisa; Sedgh, Gilda; Singh, Susheela et al. (November 2017). "Global, regional, and subregional classification of abortions by safety, 2010–14: estimates from a Bayesian hierarchical model" (in English). The Lancet 390 (10110): 2372–2381. doi:10.1016/S0140-6736(17)31794-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:28964589. 
  5. "Abortion law: In 24-week pregnancy case, Supreme Court failed to address women's right to their bodies – Firstpost". firstpost.com. 26 July 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
  6. Bean, Christopher B. (March 2014). "Antebellum Jefferson, Texas: Everyday Life in an East Texas Town. By Jacques D. Bagur. (Denton, TX: University of North Texas Press, 2012. Pp. 612. $55.00.)". Historian 76 (1): 106–107. doi:10.1111/hisn.12030_8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-2370. 
  7. "The Indian Penal Code 1860" (PDF). Archived from the original (PDF) on 24 October 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
  8. 8.0 8.1 8.2 D, Gaur, K (1991). Abortion and the Law in India. http://dspace.cusat.ac.in/jspui/handle/123456789/11161. பார்த்த நாள்: 20 June 2018. 
  9. Duggal, Ravi; Ramachandran, Vimala (November 2004). "The abortion assessment project—India: key findings and recommendations". Reproductive Health Matters 12 (24 Suppl): 122–129. doi:10.1016/S0968-8080(04)24009-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0968-8080. பப்மெட்:15938165.