ஆரணி அரண்மனை
ஆரணி அரண்மனை | |
---|---|
பகுதி: தமிழக வரலாறு, ஆரணி ஜாகீர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, தென்னிந்திய வரலாறு, இந்திய விடுதலை இயக்கம் | |
ஆரணி | |
ஆரணி அரண்மனை | |
வகை | கொத்தளக் கோட்டையும் மற்றும் அரண்மனை பகுதியும் |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
கட்டுப்படுத்துவது | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | வரலாற்று சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது |
இட வரலாறு | |
பயன்பாட்டுக் காலம் |
தற்போதுவரை |
கட்டியவர் | ஆரணி ஜாகீர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல் |
சண்டைகள்/போர்கள் | கர்நாடகப் போர்கள் |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | ஆரணி ஜாகீர், பிரித்தானிய இந்தியா |
ஆரணி அரண்மனை தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இந்த அரண்மனை முதலில் ஆரணி ஜாகீர்களால் கட்டப்பட்டதாகும்[1].
இந்த அரண்மனை ஆரணி - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குப் புறமாக சென்று பூசிமலைக்குப்பம் எனும் இடத்தில் தனித்த காட்டில் தனித்து நிற்கிறது இந்த ஜாகீர் கால அரண்மனை ஆகும்.
ஒரு ஆங்கிலேய பெண்ணின் மீது கொண்ட காதலால் தனி பங்களாவை கட்டியவர் திருமலை ஜாகீர் சாகீப் ஆவார். அந்த பெண்ணுடன் இந்த அரண்மனையில் வாழ்ந்து வந்ததாக வரலாறு உள்ளது. இந்த அரண்மனை பிரெஞ்சு கட்டிட கலை அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஆரணி அரண்மனை “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் மற்றும் பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படும் ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதற்கான சான்றுகளும் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் மூலம் கண்டறிய முடிகிறது. .[2]