அமனுல்லாகான்
| அமனுல்லாகான் | |
|---|---|
| King of the God granted Kingdom of Afghanistan and its dependencies[1] | |
| King Amanullah Khan.jpg | |
| ஆட்சிக்காலம் | February 28, 1919 - January 14, 1929 |
| பிறப்பு | June 1, 1892 |
| பிறப்பிடம் | Paghman, Afghanistan |
| இறப்பு | ஏப்ரல் 25 1960 (அகவை 67) |
| இறந்த இடம் | Zürich, Switzerland |
| முன்னிருந்தவர் | Nasrullah Khan |
| பின்வந்தவர் | Inayatullah Khan |
| துணைவர் | Soraya Tarzi |
| தந்தை | Habibullah Khan |
| தாய் | Sarwar Sultana Begum |
அமனுல்லாகான் (ஜுன் 1, 1892 – ஏப்ரல் 25, 1960) ஆப்கானிஸ்தானின் அமீராக இருந்த அபிபுல்லாவின் மகனான இவர், தந்தை கொலையுண்ட பின் படைகளின் ஆதரவு கிடைத்ததால் அமீரானார். 1919 முதல் 1929 வரை ஆப்கானிஸ்தானின் அரசராக இருந்தவர்.[2] அமனுல்லாகான் கி.பி. 1919 - ல் இந்தியாவின் மீது படையெடுத்தார். இது மூன்றாம் ஆங்கில-ஆப்கானியப் போர் எனப்பட்டது. 1924 - ல் இவர் தம்மை அரசரென அறிவித்துக் கொண்டார். புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் இவர் நாட்டிற்கு அளித்தார்.
அமனுல்லாகான் ஆப்கானிஸ்தானத்தை ஐரோப்பிய மயமாக்க விரும்பி பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதனை விரும்பாத இஸ்லாமிய முல்லாக்கள் 1924 மார்ச் முதல் 1925 ஜனவரி வரை கலகத்தில் ஈடுபட்டனர். கோஸ்ட் கலகம் எனப்பட்ட இதுவே 1928 - ல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அப்புரட்சி தோல்வியடைந்தது. ஆனால், அமனுல்லாகான் 1929 ஜனவரி 14 - ஆம் நாள் முடி துறந்து ரோமாபுரிக்குச் சென்றார். பின் 1941 - ஆம் ஆண்டு ஜெர்மனி உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார்.
மெற்கோள்[தொகு]
- ↑ Royal Ark
- ↑ Poullada, L. B. "AMĀNALLĀH". Encyclopædia Iranica (Online Edition). United States: Columbia University.