அனகா ஜெ. கோலத்
அனகா ஜெ. கோலத் Anagha J. Kolath | |
---|---|
பிறப்பு | 1994 (அகவை 29–30) கோட்டயம் மாவட்டம், கேரளம் |
தொழில் | கவிஞர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மெழுகுதிரிக்கு சொந்தம் தீப்பெட்டி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | யுவ புராஸ்கர் 2022 |
அனகா ஜெ. கோலத் (Anagha J. Kolath) என்பவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழிக் கவிஞர் ஆவார். இவர் 2022 இல், சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதினைப் பெற்றார்.
சுயசரிதை[தொகு]
அனகா ஜே. கோலத் 1994ஆம் ஆண்டு, கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலாவில் உள்ள கோலத் வீட்டில், வங்கி அதிகாரியான கே. என். ஜெயச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியை பி. ஜி. சியாமளாதேவி ஆகியோரின் மூன்று மகள்களில் இளையவராகப் பிறந்தார்.[1]
அனகா தனது ஆரம்பக் கல்வியைப் பாலா சக்தி விலாசம் என். எஸ். எஸ். பள்ளியில் பயின்றார்.[1] கிட்டாங்கூர் என். எஸ். எஸ். மேனிலைப் பள்ளியில் மேல் நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] சங்கனாச்சேரி கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அனகா, மலையாளத்தில் முதுகலைப் படிப்பதற்காகக் கடப் பள்ளியில் பயின்றார்.[1]
இலக்கிய வாழ்க்கை[தொகு]
இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது அனகா தனது முதல் கவிதையை எழுதினார்.[1] கவிதைகள் எழுதுவதோடு மட்டுமின்றி கவிதைகளை வாசிப்பதிலும் வல்லவர். சிறுவயதிலிருந்தே குருவாயூர் தேவஸ்தானம் நடத்தும் நாராயணீயம், பூந்தானம் பாராயணம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.[1] 2013-ல், குருவாயூர் கோவிலிலிருந்து இவருக்குச் சுவர்ண முத்திரை (தங்கப் பதக்கம்) வழங்கப்பட்டது.[1] ஒரு முன்னணி மலையாள தொலைக்காட்சியில் கவிதை வாசிப்புப் போட்டியில் மூன்றாவது இடத்தையும் வென்றுள்ளார்.[1]
வெளியீடுகள்[தொகு]
தன் கவிதைகளைத் தொகுத்து வெளியிடத் தயங்கிய அனகாவை கட்டாயப்படுத்தி கவிதையை வெளியிடச் செய்து அதற்குத் தேவையான உதவிகளைச் செய்தவர் எழுத்தாளர் கே.ஜெயக்குமார்.[2] சுமார் 30 கவிதைகள் நான் அறிந்த காதல் என்ற தலைப்பில் அனகாவின் முதல் கவிதைத் தொகுப்பாக 2014-ல் வெளியிடப்பட்டது.[3] 51 கவிதைகளுடன் காவ்யாமிர்தம் என்ற கவிதைப் பாடல் ஒலித் தட்டாக வெளியிடப்பட்டுள்ளது.[1] இவர் 2020-ல் சாகித்திய அகாதமியின் இணையவழி கவியரங்கில் (கவிதை விவாத மேடை) கலந்துகொண்டார்.[2]
கவிதை மட்டுமின்றி, இதழ்கள் மற்றும் இணையத்தில் கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அனகா தீவிரமாக உள்ளார்.[2]
விருதுகளும் கௌரவங்களும்[தொகு]
சிறந்த கவிதைக்கான அனைத்திந்திய வானொலி யுவவாணி விருது, பன்னாட்டுத் தாய்மொழி தினம்-2014, அங்கணம் கவிதா விருது (2014) கல்லூரி மாணவர்களுக்கான கே. எம். சுகுமாரன் நினைவு விருது (2014) மற்றும் புனலூர் பாலன் கவிதை விருது[4] (2020) உள்ளிட்ட பல விருதுகளை அனகா பெற்றுள்ளார்.[5] 2022-ல், இவர் தனது மெழுகுத்திரிக்கு சுவந்தம் தீப்பெட்டி என்ற கவிதைத் தொகுப்பிற்காகச் சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றார்.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Daily, Keralakaumudi. "അനഘയുടെ അക്ഷരങ്ങൾ". Keralakaumudi Daily (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
- ↑ 2.0 2.1 2.2 "കഥാകൃത്ത് സേതുവിനും കവി അനഘ ജെ കോലത്തിനും കേന്ദ്ര സാഹിത്യ അക്കാദമി പുരസ്കാരം » Newsthen" (in மலையாளம்). 2022-08-24. பார்க்கப்பட்ட நாள் 2022-08-25.
- ↑ "A little wordsmith par excellence - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
- ↑ "പുനലൂർ ബാലൻ പുരസ്കാരം" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
- ↑ "On write path". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
- ↑ "Malayalam writers Sethu, Anagha J Kolath bag Sahitya Akademi awards". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.