அத்தாணி சந்திரசேகரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்தாணி சந்திரசேகரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் அத்தாணி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக சந்திரசேகரர் உள்ளார். இங்குள்ள இறைவி ஆனந்தவல்லி ஆவார். சிவராத்திரி, மார்கழி திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. [1]

அமைப்பு[தொகு]

இருநிலைக் கோபுரங்களைக் கொண்ட இக்கோயிலின் மூலவர் சுயம்புவாக உள்ளார். திருச்சுற்றில் நவக்கிரகங்கள், விநாயகர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் உள்ளனர். சந்திரசேகரருக்கு முன் உள்ள லிங்கத்திருமேனியைச் சுற்றி ஐந்து தலையுடைய நாகம் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]