அச்சுத ராமச்சந்திர நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சுத ராமச்சந்திர நாயக்கர் (Achutha Ramachandra Nayak) 1520 முதல் 1540 வரை ஆண்ட செஞ்சி நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] திருவண்ணாமலை கோயிலையும் கோயில் கோபுரத்தையும் சூழ்ந்து கோட்டைச் சுவர்களைக் கட்டினார்.[2] தனது ஆட்சியின் இறுதியில் திண்டிவனத்தில் விஷ்ணு கோவிலையும், நெடுங்குன்றம் மற்றும் சேத்துப்பட்டு கோவில்களின் கோபுரத்தையும் கட்டினார். பல அக்கிரகாரங்களையும் வழங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜெகாதா, ed. (2005). நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும். அறிவு நிலையம் பதிப்பகம். p. 131.
  2. Chidambaram S. Srinivasachari, ed. (1943). A History of Gingee and Its Rulers. Annamalai University.

வெளி இணைப்புகள்[தொகு]