யோகா கற்றுக் கொள்ளுங்கள் (நூல்)
யோகா கற்றுக் கொள்ளுங்கள் (நூல்) | |
---|---|
வகை: | மருத்துவம் |
துறை: | யோகாசனங்கள் |
இடம்: | நலம், நியூ ஹாரிஜன் மீடியா பி.லிட்., எண்33/15, இரண்டாவது மாடி, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை - 600 018. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 120 |
பதிப்பகர்: | நலம் பதிப்பகம் |
பதிப்பு: | டிசம்பர் ’2007 |
யோகாவின் அடிப்படைத் தத்துவம் முதல் ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா உதவும் முறைகள் என அனைத்தையும் இந்த “யோகா கற்றுக் கொள்ளுங்கள்” நூல்(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8368-612-9) விளக்குகிறது. 120 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 60 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர்[தொகு]
நூலாசிரியர் கணபதி ராம்கிருஷ்ணன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் இவர் பத்திரிகைகளில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.
பொருளடக்கம்[தொகு]
- யோகா -ஓர் அறிமுகம்
- மனநலமே உடல் நலம்
- யோகா- மூன்று அம்சங்கள்
- ஆசனங்கள்
- பிராணாயாமம்
எனும் 5 தலைப்புகளில் எளிமையான நடையில் யோகா குறித்து இந்த நூலில் முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
யோகா -ஓர் அறிமுகம்[தொகு]
முதல் பகுதியான இதில் யோகா என்றால் என்ன என்பது குறித்து முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.
மனநலமே உடல் நலம்[தொகு]
இத்தலைப்பில் மனநலம் குறித்து விளக்கப்பட்டு அதுவே உடல் நலத்திற்கு உதவுகிறது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
யோகா- மூன்று அம்சங்கள்[தொகு]
யோகாவில் இருக்கும் மூன்று நிலைகளான ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
ஆசனங்கள்[தொகு]
உடலுக்கு வலிமையும், உள்ளத்துக்குத் தெளிவையும் அளிக்கும் நூற்றுக்கணக்கான ஆசனங்கள் இருக்கின்றன போதும் 69 ஆசனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆசனங்களில் மிக முக்கியமான ஆசனங்கள் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதுடன் அதற்கான பலன்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிராணாயாமம்[தொகு]
பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சியில் 12 முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமான சில மூச்சுப் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்து அதனால் ஏற்படும் பயன்களும் சொல்லப்பட்டுள்ளன.
- இன்று உலகம் முழுவது பரவி வரும் யோகாசனப் பயிற்சி முறை குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள பயிற்சிப் படங்களில் இருப்பவர் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.