வரப்பு
விளை நிலங்களுக்கு இடையே உள்ள மண் தடுப்புகள் வரப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஓர் ஆள் நடந்து செல்லத்தக்க அகலத்தில் அமைந்திருக்கும்.
வேளாண் அறிவியல்[தொகு]
பயிர் சாகுபடிக்கு முன் வரப்பு வெட்டித் திருத்துவது முக்கியப் பணியாகும். அதுமட்டுமல்லாமல் நீர் நிலைகளில் நீரைத் தேக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறு நீர்பிடிப்புகள்[தொகு]
சரிவுப்பகுதிகளில் வி வடிவ வரப்புகள் 5 மீ - 5 என்றஅளவில் அமைத்து மரங்கள் அதன் நடுவில் நடப்படுகிறது. வரப்புகளின் உயரம் மழை அளவு, சரிவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். மேலும் சரிவுக்கு குறுக்கே அரை வட்ட வடிவ வரப்புகள் 2 மீ விட்டத்தில் 15.20 செ.மீ உயரத்தில் அமைக்கப்படுகிறது. இவை மழைக்கலங்களில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.[1]
பயன்பாடுகள்[தொகு]
- நில அளவை (தமிழ்நாடு) முறைகளிலும் வரப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
- இவை நிலத்தில் மழை நீரையும் பாசன நீரையும் தேக்கி வைக்கவும், மேம்பட்ட விரைந்த நீர்ப்பாசனத்திற்கும் உதவுகின்றன.
- நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொழுது வயலை கடந்து செல்ல உதவும் பாதைகளாகவும் அண்டை நிலங்களுடன் எல்லையை வரையறுக்கவும் இவை பயன்படுகின்றன.
- வரப்பில் வளரும் புல், கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றது.
- நிலத்தை பார்வையிடப் பயன்படும் ஓர் உயர்ந்த தளமாகவும் வரப்புகள் உதவுகின்றன.
- உழைப்பிற்கு நடுவே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேலை செய்யும் ஆட்களுக்கு பயன்படுகிறது.
வரப்பினால் வரும் பிரச்சினைகள்[தொகு]
வரப்புகளை உட்புறமாக அதிகமாக வெட்டுவதன் மூலம் வரப்பை நகர்த்தி அண்டை நிலத்தை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் சில சமயங்களில் வரப்புகள் நில உரிமை தகராறுகளுக்கு காரணமாய் அமைவதும் உண்டு.
ஔவையார் பாடல்[தொகு]
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியுள்ளார்
உசாத்துணைகள்[தொகு]
- ↑ http://agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_swc_watershed_develop_insitu_moisture_ta.html நீர் வடிப்பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் அறுவடை அமைப்புகள்