வரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


விளை நிலங்களுக்கு இடையே உள்ள மண் தடுப்புகள் வரப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஓர் ஆள் நடந்து செல்லத்தக்க அகலத்தில் அமைந்திருக்கும்.

வேளாண் அறிவியல்[தொகு]

பயிர் சாகுபடிக்கு முன் வரப்பு வெட்டித் திருத்துவது முக்கியப் பணியாகும். அதுமட்டுமல்லாமல் நீர் நிலைகளில் நீரைத் தேக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குறு நீர்பிடிப்புகள்[தொகு]

சரிவுப்பகுதிகளில் வி வடிவ வரப்புகள் 5 மீ - 5 என்றஅளவில் அமைத்து மரங்கள் அதன் நடுவில் நடப்படுகிறது. வரப்புகளின் உயரம் மழை அளவு, சரிவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். மேலும் சரிவுக்கு குறுக்கே அரை வட்ட வடிவ வரப்புகள் 2 மீ விட்டத்தில் 15.20 செ.மீ உயரத்தில் அமைக்கப்படுகிறது. இவை மழைக்கலங்களில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.[1]

பயன்பாடுகள்[தொகு]

  • நில அளவை (தமிழ்நாடு) முறைகளிலும் வரப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
  • இவை நிலத்தில் மழை நீரையும் பாசன நீரையும் தேக்கி வைக்கவும், மேம்பட்ட விரைந்த நீர்ப்பாசனத்திற்கும் உதவுகின்றன.
  • நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொழுது வயலை கடந்து செல்ல உதவும் பாதைகளாகவும் அண்டை நிலங்களுடன் எல்லையை வரையறுக்கவும் இவை பயன்படுகின்றன.
  • வரப்பில் வளரும் புல், கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றது.
  • நிலத்தை பார்வையிடப் பயன்படும் ஓர் உயர்ந்த தளமாகவும் வரப்புகள் உதவுகின்றன.
  • உழைப்பிற்கு நடுவே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேலை செய்யும் ஆட்களுக்கு பயன்படுகிறது.

வரப்பினால் வரும் பிரச்சினைகள்[தொகு]

வரப்புகளை உட்புறமாக அதிகமாக வெட்டுவதன் மூலம் வரப்பை நகர்த்தி அண்டை நிலத்தை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் சில சமயங்களில் வரப்புகள் நில உரிமை தகராறுகளுக்கு காரணமாய் அமைவதும் உண்டு.

ஔவையார் பாடல்[தொகு]

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்
என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியுள்ளார்

உசாத்துணைகள்[தொகு]

  1. http://agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_swc_watershed_develop_insitu_moisture_ta.html நீர் வடிப்பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் அறுவடை அமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரப்பு&oldid=3539029" இலிருந்து மீள்விக்கப்பட்டது