மைசூர் உமாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாதேவி (Umadevi) சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் மைசூர் படைத்தலைவராக இருந்த இரண்டாம் வீரபல்லாலரின் மனைவிகளில் ஒருவராவார். [1] இவருடைய காலம் கி.பி 1150 முதல் 1218 வரையுள்ள காலமாகும்.

1150 ஆம் ஆண்டில் பிறந்த உமாதேவி இருபத்தி இரண்டு வயதில் இரண்டாம் வீரபல்லாலரின் மனைவிகளில் ஒருவரானார்.[2]. சோழமகாதேவி இரண்டாம் வீரபல்லாலரின் முதல் மனைவியாக இருந்தார். குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில் எதிரிகளான சாளுக்கியர்களுக்கு எதிராக மைசூர் படைகளுக்கு உமாதேவி தலைமை தாங்கியுள்ளார். [3] நாட்டின் நிர்வாக செயல்பாடுகளில் உமாதேவி பங்கேற்பதை பல்லாலர் அனுமதித்தார். 1190 ஆம் ஆண்டில் கல்யாணியில் (இன்றைய பீதர் நகருக்கு அருகில்) சாளுக்கியர்களுக்கு எதிராக ஒய்சாளர்கள் போரிட்டபோது ஒய்சாளர்களின் வெற்றியில் உமாதேவி பெரும்பங்கு வகித்தார். [4] 1218 ஆம் ஆண்டு தனது கணவர் இறந்ததைத் தொடர்ந்து இந்திய நாட்டின் பாரம்பரியமான சதி என்ற உடன்கட்டை ஏறும் சடங்கிற்காக தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Women in power
  2. peoplepill.com. "About Veera Ballala II: Hoysala king". peoplepill.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10. {{cite web}}: Text "Biography, Facts, Career, Wiki, Life" ignored (help)
  3. Shek Ali, Dr. B., ed., The Hoysala Dynasty, Mysore, 1977.
  4. Derrett, J. D. M., The Hoysalas, London, 1957.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_உமாதேவி&oldid=3167669" இலிருந்து மீள்விக்கப்பட்டது