மைசூர் உமாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாதேவி (Umadevi) சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் மைசூர் படைத்தலைவராக இருந்த இரண்டாம் வீரபல்லாலரின் மனைவிகளில் ஒருவராவார். [1] இவருடைய காலம் கி.பி 1150 முதல் 1218 வரையுள்ள காலமாகும்.

1150 ஆம் ஆண்டில் பிறந்த உமாதேவி இருபத்தி இரண்டு வயதில் இரண்டாம் வீரபல்லாலரின் மனைவிகளில் ஒருவரானார்.[2]. சோழமகாதேவி இரண்டாம் வீரபல்லாலரின் முதல் மனைவியாக இருந்தார். குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில் எதிரிகளான சாளுக்கியர்களுக்கு எதிராக மைசூர் படைகளுக்கு உமாதேவி தலைமை தாங்கியுள்ளார். [3] நாட்டின் நிர்வாக செயல்பாடுகளில் உமாதேவி பங்கேற்பதை பல்லாலர் அனுமதித்தார். 1190 ஆம் ஆண்டில் கல்யாணியில் (இன்றைய பீதர் நகருக்கு அருகில்) சாளுக்கியர்களுக்கு எதிராக ஒய்சாளர்கள் போரிட்டபோது ஒய்சாளர்களின் வெற்றியில் உமாதேவி பெரும்பங்கு வகித்தார். [4] 1218 ஆம் ஆண்டு தனது கணவர் இறந்ததைத் தொடர்ந்து இந்திய நாட்டின் பாரம்பரியமான சதி என்ற உடன்கட்டை ஏறும் சடங்கிற்காக தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Women in power
  2. peoplepill.com. "About Veera Ballala II: Hoysala king". peoplepill.com. 2021-06-10 அன்று பார்க்கப்பட்டது. Text "Biography, Facts, Career, Wiki, Life" ignored (உதவி)
  3. Shek Ali, Dr. B., ed., The Hoysala Dynasty, Mysore, 1977.
  4. Derrett, J. D. M., The Hoysalas, London, 1957.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_உமாதேவி&oldid=3167669" இருந்து மீள்விக்கப்பட்டது