தியத்தீராவின் லீதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீதியாள் ஞானஸ்நானம் பெற்ற இடமாகக் கூறப்படுகிற இக்கால கிரேக்க வைதீகமான திறந்த வெளியில் நடக்கிற தேவாலயம்.

தியத்தீராவின் லீதியாள் (Lydia of Thyatira, கிரேக்க மொழி: Λυδία) என்பவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெண். ஐரோப்பாவில் கிறித்தவத்திற்கு மாற்றப்பட்ட முதல் பெண் என்று ஆவணப்படுத்தப்பட்டவர். பல கிறித்தவப் பிரிவுகள் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்துள்ளன.

புதிய  ஏற்பாட்டின் கூறுரை[தொகு]

14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.

 15 அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி; நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். 
—அப்போஸ்தலர் 16 :14-15

வெய்ன் க்ரூடம், லீதியாவின் கதையை ஒரு பயனுள்ள அழைப்பிற்கு உதாரணமாக காண்கிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Grudem, Wayne (1994). Systematic Theology. InterVarsity Press. பக். 693. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியத்தீராவின்_லீதியா&oldid=3882445" இலிருந்து மீள்விக்கப்பட்டது