தர்பார் மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்பார் மகால் (Darbar Mahal) பாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள பகவல்பூர் நகரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும் [1]. இந்த அரண்மனையை ஐந்தாம் பகவல் கான் தன்னுடைய மனைவிக்காகக் கட்டினார் [2]. 1905 ஆம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு முதல் இந்த அரண்மனை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கட்டிடம் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Darbar Mahal keeps 'Princely State' alive". Archived from the original on 2018-12-31. பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.
  2. "A century later, Bahawalpur's Darbar Mahal stands tall - The Express Tribune". 21 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பார்_மகால்&oldid=3557325" இலிருந்து மீள்விக்கப்பட்டது