சேந்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
==திருப்பல்லாண்டு பாடுதல்== |
==திருப்பல்லாண்டு பாடுதல்== |
||
ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவின் போது நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அப்போது "சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" என்று ஓர் அசரீரி கேட்டது. அது கேட்ட சேந்தனார் இறையவன் திருவருளால் "மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்" எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடி, வடம்பிடிக்காமல் தேர் தானே ஓடி இருப்பிடம் வந்து சேரச் செய்தார். இவ்வற்புதத்தை கண்ட அனைவரும் சேந்தனாரின் பத்தியை பேற்றினார்கள. |
|||
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]] |
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]] |
10:19, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம்
சேந்தனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருப்பல்லாண்டு பாடிய அருளாளர் ஆவார். இவர் திருவெண்காட்டிற்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் தேன்றியவர். பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்காளராக இருந்த சமயம் அவரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அதில் உள்ள பொருள்களை எடுத்துச்செல்லுமாறு செய்தார். இதை அறிந்த பட்டினத்தாரின் சுற்றத்தவர்கள் சோழ மன்னனிடம் முறையிடவே மன்னன் சேந்தனாரை சிறையில் அடைந்தான். சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.
தில்லையில் சேந்தனார்
சேந்தனார் தனது மனைவி மக்களுடன் தில்லைக்குச் சென்று விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்தினார். நாள்தோறும் விறகுவிற்றுப் பெற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்து சிவத்தொண்டாற்றி வந்தார். ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட்டிற்கு வந்து சேந்தனார் அளித்த களியை உணவாக ஏற்று அதன் ஒரு பகுதியைத் தமது திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார்.
திருப்பல்லாண்டு பாடுதல்
ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவின் போது நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அப்போது "சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" என்று ஓர் அசரீரி கேட்டது. அது கேட்ட சேந்தனார் இறையவன் திருவருளால் "மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்" எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடி, வடம்பிடிக்காமல் தேர் தானே ஓடி இருப்பிடம் வந்து சேரச் செய்தார். இவ்வற்புதத்தை கண்ட அனைவரும் சேந்தனாரின் பத்தியை பேற்றினார்கள.