ஒன்பதாம் திருமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.

ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:

  1. சிதம்பரம் -16
  2. கங்கைகொண்ட சோழேச்சரம் - 1
  3. திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1
  4. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் - 1
  5. திருமுகத்தலை - 1
  6. திரைலோக்கிய சுந்தரம் - 1
  7. திருப்பூவணம் - 1
  8. திருச்சாட்டியக்குடி - 1
  9. தஞ்சை பெருங்கோவில் - 1
  10. திருவிடைமருதூர் - 1
  11. திருவாரூர் -1
  12. திருவீழிமிழழை - 1
  13. திருவாவடுதுறை - 1
  14. திருவிடைக்கழி - 1

பதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும்[தொகு]

சிறு குறிப்புக்கள்[தொகு]

  • திருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும்.
  • கருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார்.
  • சேதிராசர், கண்டராதித்தர், வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர்.
  • தஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.

உசாவு துணை நூல்[தொகு]

  • சைவ சமயக் கலைக் களஞ்சியம்(தோத்திரமும் சாத்திரமும்)- முனைவர்.சிவ.திருச்சிற்றம்பலம்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பதாம்_திருமுறை&oldid=3800055" இலிருந்து மீள்விக்கப்பட்டது