பி. எச். பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பி. எச். பாண்டியன்''' (''P. H. Pandian'') என்பவர் தமிழகத்தின், [[திருநெல்வேலி மாவட்டம்]] சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.
'''பி. எச். பாண்டியன்''' (''P. H. Pandian'', (27 பெப்ரவரி 1945 – 4 சனவரி 2020)) என்பவர் தமிழகத்தின், [[திருநெல்வேலி மாவட்டம்]] சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.


== வாழ்கை ==
== வாழ்கை ==

08:19, 6 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

பி. எச். பாண்டியன் (P. H. Pandian, (27 பெப்ரவரி 1945 – 4 சனவரி 2020)) என்பவர் தமிழகத்தின், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.

வாழ்கை

பி. எச். பாண்டியன் 1960களின் இறுதியில் வழக்கறிஞராக தன் வாழ்கையைத் துவக்கினார். அப்போது பரபரப்பான வழக்காக இருந்த ஆளவந்தார் கொலை வழக்கை அரசு வழக்கறிஞராக இருந்து நடத்திய ஜே. எஸ். அதனேசியசிடம் உதவி வழக்கறிஞராக சேர்ந்து பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆர். 1972இல் அதிமுகவைத் தொடங்கியபோது பி. எச் பாண்டியன் அக்கட்சியியல் இணைந்தார். 1972 முதல் 1988வரை அதிமுக வழக்கறிஞர் அணியியன் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1989இல் அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்[1]

சட்டப்பேரவைத் தலைவராக

1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார்.[2][3] பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தை நிலைநாட்டியதற்காக நினைவூகூறப்படுகிறார். இவர் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில், ஒன்பது திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் சட்ட நகலை எரித்ததைக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்தார்.[4] 1987இல் சட்டமன்றத்தை விமர்சிக்கும்வகையில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அட்டைப்பட கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது. இதைக் கண்டித்து அந்த பத்திரிக்கையின் ஆசிரியரான பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பினார். பி. எச் பாண்டியன். இதன்படி சட்டமன்றத்துக்கு வந்த பாலசுப்பிரமணியனை கூண்டில் ஏற்றிய பாண்டியன், அவரை மன்னிப்புக் கேட்க உத்தரவிட்டார். இதற்கு பால சுப்பிரமணியன் மறுத்ததால் மூன்றுமாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் பாண்டியன். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரவைத் தலைரான பாண்டியனின் உத்த்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பி. எச். பாண்டியனுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை வாங்க மறுத்த பி. எச் பாண்டியன், நீதிமன்றத்தைவிட சட்டப்பேரவைத் தலைவரான தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து நிலைமை மோசமாவதைத் தடுக்க பாலசுப்பிரமணியனை சிறையில் இருந்து விடுதலை செய்ய முதலமைச்சர் எம். ஜி. ஆர் உதுதரவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.[5]

குடும்பம்

இவரது மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துனைவேந்தராக பதவிவகித்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக 2019 ஆம் ஆண்டு காலமானார். இந்த இணையருக்கு டாக்டர் தேவமணி, பால் மனோஜ் பாண்டியன், நவீன் பாண்டியன், வினோத் பாண்டியன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களில் மகன் மனோஜ் பாண்டியனும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார். இந்திலையில் உடல் நிலை பாதிக்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்து பி. எச். பாண்டியன் 2020 சனவரி 4 அன்று காலமானார். [6]

மேற்கோள்கள்

  1. http://www.a2ztamilnadu.com/tamilnews/pandian-was-appointed-secretary-of-the-aiadmk/
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu.
  3. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
  4. 'சட்டப்பேரவை தலைவருக்கான அதிகாரத்தை மெய்ப்பித்த பி.எச்.பாண்டியன்', இந்து தமிழ் 2020 சனவரி 5
  5. சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று பிரகடனம் செய்த பி. எச். பாண்டியன், ஒன் இந்தியா, 2020 சனவரி 4
  6. முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்! நியூஸ் 18, 2020 சனவரி 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எச்._பாண்டியன்&oldid=2889053" இலிருந்து மீள்விக்கப்பட்டது