சைவசமயநெறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சைவசமயநெறி''' <ref>ஆறுமுக நாவலரின் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.</ref> |
'''சைவசமயநெறி''' என்னும் நூல் <ref>ஆறுமுக நாவலரின் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.</ref> 16 நூற்றாண்டில் வாழ்ந்த [[மறைஞான சம்பந்தர்]] என்பவரால் எழுதப்பட்டது. <ref> |
||
சைவ சமயநெறி சாற்றினன் சம் பந்தன் உயிர்<br /> |
சைவ சமயநெறி சாற்றினன் சம் பந்தன் உயிர்<br /> |
||
மையறை வாய்க்க வரம். (இந்த நூலின் இறுதி வெண்பா)</ref> |
மையறை வாய்க்க வரம். (இந்த நூலின் இறுதி வெண்பா)</ref> |
06:34, 9 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
சைவசமயநெறி என்னும் நூல் [1] 16 நூற்றாண்டில் வாழ்ந்த மறைஞான சம்பந்தர் என்பவரால் எழுதப்பட்டது. [2]
இது 727 குறள் வெண்பாவால் ஆன சைவ சமயச் சாத்திரப் பெருநூல்.
- முதல் பகுதியில் ஆசாரியர் இலக்கணம் 117 குறட்பாக்களில் சொல்லப்படுகிறது. நல்ல நதிக்கரையில் பிறத்தல், மனக்குற்றம் நீக்குதல், உடற்குற்றம் இன்மை, தீட்சை பெற்றிருத்தல், வேதம் உணர்ந்திருத்தல் முதலானவை ஆசாரியரது இலக்கணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
- இரண்டாம் பகுதியில் மாணாக்கர் இலக்கணம் கூறப்படுகிறது. இதில் மாணாக்கர்கள் சமயி, புத்திரகன், சாதகன் என மூன்று வகையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பூப் பறித்தல், வில்வம் எடுத்தல், குருவை வழிபடும் முறை முதலானவை இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
- மூன்றாம் பகுதி பொதுவியல். இதில் ஆசாரியரின் நித்திய கருமங்கள் கூறப்பட்டுள்ளன. குளிர்ந்த நீரில் நீராடுதல், ஆன்மார்த்த பூசை, பரமார்த்த பூசை, சிவ-சின்னம் தரித்தல், வணங்கும் முறை, உண்ணும் முறை முதலானவை இப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. சிவபூசை பற்றிய செய்திகள் இதில் 572 குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ளன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005