விவிலிய ஞானிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying de:Heilige Drei Könige to de:Heilige drei Könige
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: gn:Mbohapy Karai Imba'ekuaáva
வரிசை 49: வரிசை 49:
[[ga:An Triúr Saoithe]]
[[ga:An Triúr Saoithe]]
[[gl:Reis Magos]]
[[gl:Reis Magos]]
[[gn:Mbohapy Karai Imba'ekuaáva]]
[[he:שלושת האמגושים]]
[[he:שלושת האמגושים]]
[[hr:Sveta tri kralja]]
[[hr:Sveta tri kralja]]

20:04, 5 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

விவிலிய ஞானிகள், மூன்று அரசர்கள் அல்லது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எனப்படுவோர் கிறித்தவ பாரம்பரியப்படி, இயேசுவின் பிறப்புக்கு பின்பு, விண்மீனின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து வந்த குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர் ஆவர். இவர்கள் கிறித்துமசு குடில் முதலிய கிறிஸ்து பிறப்புக் கால கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பெறுகின்றார்கள்.

ஞானிகள்

மூன்று அரசர்கள்

இவர்கள் மூன்று பேர் என்று விவிலியத்தில் இல்லை. ஆயினும் இவர்கள் இயேசுவுக்கு அளித்த பரிசுகளின் எண்ணிக்கையினை வைத்து இவர்கள் மூவர் என நம்பப்படுகின்றது.

இவர்கள் விண்மீனை ஆய்து அறிந்து வந்ததால் இவர்கள் வானியளாலராக இருக்கலாம்.

இசுவின் வருகையின் போது எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; திருப்பாடல்கள் 72:14இல் உள்ள மறைநூல் வாக்கினால் இவர்கள் அரசர்களாக இருப்பர் என நம்பப்படுகின்றது.

பரம்பரியப்படி இவர்களின் பெயர்கள்:

விவிலியத்தில்

இவர்கள் வந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.[3]


ஆதாரங்கள்

  1. Excerpta Latina Barbari, page 51B: "At that time in the reign of Augustus, on 1st January the Magi brought him gifts and worshipped him. The names of the Magi were Bithisarea, Melichior and Gathaspa.".
  2. Hugo Kehrer (1908), Volume I, page 70 Online version Kehrer's commentary: "Die Form Jaspar stammt aus Frankreich. Sie findet sich im niederrheinisch-kölnischen Dialekt und im Englischen. Note: O. Baist page 455; J.P.Migne; Dictionnaire des apocryphes, Paris 1856, vol I, p. 1023. ... So in La Vie de St. Gilles; Li Roumans de Berte: Melcior, Jaspar, Baltazar; Rymbybel des Jakob von Märlant: Balthasar, Melchyor, Jaspas; ein altenglisches Gedicht des dreizehnten oder vierzehnten Jahrhunderts (13th century!!) Note: C.Horstmann, Altenglische Legenden, Paderborn 1875, p.95;
  3. Matthew 2:11–12
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_ஞானிகள்&oldid=1293051" இலிருந்து மீள்விக்கப்பட்டது