திவாகர நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
"சேந்தன் திவாகரம்" நிகண்டு ஆனது, ஒரு சாராரால் "திவாகர நிகண்டு" எனவும் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. '''திவாகர நிகண்டு''' என்னும் நூல் சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திவாகர முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த [[சேந்தன்]] என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் '''சேந்தன் திவாகரம்''' என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref> இந்நூல் ''ஆதி திவாகரம்'' என்னும் நூலைத் தழுவி எழுதியதாக ஒரு சாராரால் கருதப்படுகின்றது.
"சேந்தன் திவாகரம்" நிகண்டு ஆனது, ஒரு சாராரால் "திவாகர நிகண்டு" எனவும் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. '''திவாகர நிகண்டு''' என்னும் நூல் சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திவாகர முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த [[சேந்தன்]] என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் '''சேந்தன் திவாகரம்''' என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref> இந்நூல் ''ஆதி திவாகரம்'' என்னும் நூலைத் தழுவி எழுதியதாக ஒரு சாராரால் கருதப்படுகின்றது.


இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. K. S. ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளையும் இப்பாட்டுக்களில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை.
இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. K. S. ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளையும் இப்பாட்டுக்களில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை.

09:05, 10 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

"சேந்தன் திவாகரம்" நிகண்டு ஆனது, ஒரு சாராரால் "திவாகர நிகண்டு" எனவும் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. திவாகர நிகண்டு என்னும் நூல் சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த சேந்தன் என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் சேந்தன் திவாகரம் என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.[1] இந்நூல் ஆதி திவாகரம் என்னும் நூலைத் தழுவி எழுதியதாக ஒரு சாராரால் கருதப்படுகின்றது.

இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. K. S. ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளையும் இப்பாட்டுக்களில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை.

இந்த நிகண்டில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் தரப்பட்டுள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழில் இன்றுள்ள நிகண்டுகளில் இதுவே காலத்தால் முந்தியது==மேற்கோள்கள்==

  1. சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001

இந்த நிகண்டினை இயற்றியவர் ‘சைவன்‘ என ஒருசாராரும், ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ‘ஜைனன்‘ எனவும் கூறுவர். பேராசிரியர் வையாபுரி பிள்ளை இது பற்றித் தனது "History of Tamil Language and Literature" என்ற நூலின் பக்கம் - 164இல் "The earliest Nighandu (lexicon) in Tamil, Divakaram, is a Jain work. Forgetting this, Saivaite scribes and editors have placed Siva's name at the beginning of the first section in contravention of Jain practice" எனக் கூறியுள்ளார்.

‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்ட மிகுதி இரண்டு முலத்தையும் இணைத்து, 1923ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டிருந்தது. பின்னர், அது 1958ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

1. இந்த நிகண்டின் பெயர், இயற்றியவனின் சமயம்

இந்த நிகண்டின் மூன்றாவது தொகுதியானது, பின்வரும் பாட்டூடாக முடிக்கப்பட்டுள்ளது:

காதலி கையில் போதிப் பெருந்தவன் தெவ்வடு கால வைவேலெழிலி அவ்வை பாடிய அம்பற் கிழவன் தேன் தார்ச் சேந்தன் தெரிசொல் திவாகரத்துள் மூன்றாவது விலங்கின் பெயர்த்தொகுதி முற்றிற்று.

இப்பாடானது “பொதிப் பெருந்தவன்’ பற்றிப் பேசியுள்ளது. இது ‘புத்தபெருமான்’ஆகும். ஆகவே, ‘சேந்தன் திவாகரம்’ ஆனது பௌத்தத்துடன்தான் அடையாளப்படுத்தப்படமுடியும்.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், சேந்தன் திவாகரத்தின் எட்டாவது தொகுதி முடிவில் வைக்கப்பட்டுள்ள பாட்டு ‘அறம்’ பற்றிப் பேசியுள்ளது. அப்பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது:

மறக்குறும் போட்டி அறத்தின் வழி நின்று கவிகைத் தண்ணளி புவிபெற வாணையின் ஐம்புலன் ஆளும் அம்பர் கோமான் திண்பெருஞ் சேந்தன் திவாகரத்து எட்டவது பண்பு பற்றிய பெயர்த்தொகுதி முற்றிற்று.

இந்த இரண்டு பாட்டுக்களும் "சேந்தன் திவாகரம்" என்றுதான் நூலைக் குறிப்பிட்டுள்ளன. ஆகவே, இந்த நிகண்டினைச் "சேந்தன் திவாகரம்" எனக் குறிப்பிடுவதுதான் சரியானது.

இக்கட்டத்தில், அதன் ‘காப்பு’ பாட்டானது:

தந்தி முகத்து எந்தை சதங்கைப் பதம்போற்றி சிந்தை விளக்காம் திவாகரத்துள் - வந்த தொகுதி யொரு பன்னிரண்டுஞ் சோராமல் நேரே பகுதியுற மனமே பற்று எனக் கூறப்பட்டிருப்பதால், அது சைவத்துடன் தொடர்பானது என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.

ஆனால், முன்னைய கட்டுரைகளில் ஆராயப்படவைகள் ‘விநாயகன்’ என்பது, புத்தபெருமானின் அடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்டது என்பதை வலியுறுத்துவதாகவே உள்ளது.

இந்தநிலையில், ‘சேந்தன் திவாகரம்’ ஆனது ‘மஹாயாண‘ பௌத்த சமயம் சார்ந்த நூல் ஆகவே இருக்கமுடியும்.

2. நூலாசிரியனும், இவன் இயற்றியிருந்தவைகளும்

‘போதிப் பெருந்தவன,;’ ‘அறம்’ என்பவை பற்றிப் பேசியுள்ள ‘சேந்தன் திவாகரம்’ நிகண்டின் ஐந்தாவது தொகுதி முடிவில் வைக்கப்பட்டுள்ள “ஒருவற் கொருவன் ஆகியுதவியும் …” என ஆரம்பிக்கும் பாட்டானது, சேந்தனைச் “செந்தமிழ்ச் சேந்தன்” என்றுள்ளது. இது, சேந்தனை இயல், இசை, நாட்டியத் தமிழ்களுடன் இணைக்கிறது. இதனை மீண்டும் உறுதிப்படுத்துவதுபோல், ‘சேந்தன் திவாகரம்’ நூலின் பின்வரும் பாட்டுக்கள் அமைந்துள்ளன:

வடநூற்கரசன் தென்றமிழ்க் கவிஞன் கவியரங்கேற்றும் உபயகவிப்புலவன் செறி குணத்து அம்பற் கிழவோன் சேந்தன் அறிவு கரியாகத் தெரிசொற் றிவாகரத்துள் முதலாவது தெய்வப்பெயர்த்ததொகுதி முற்றிற்று.

இப்பாட்டானது சேந்தனை “வடநூற்கரசன் தென்தமிழ்க் கவிஞன்” என்றுள்ளது. இது, சேந்தன் என்ற தென்தமிழக் கவிஞனே, சமஸ்கிருத மொழி நூல்களையெல்லாம் இயற்றியதாக உணர்த்துகிறது.

இது சாத்தியமா, எப்படி என்ற கேள்வியை எழுப்பவைக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பின்வரும் பாட்டுக்கள் அமைந்துள்ளன:

அரக்கரைப் பொருத முரட்போர் வில்லும் பாரதம் பொருத பேரிசைச் சிலையும் தாருகற் கடிந்த வீரத் தயிலும் பாடிய புலவன் பதியம்பற் சேந்தன் பயில்வுற்ற திவாகரத்துப் பத்தாவது ஒலிபற்றிய பெயர்த்தொகுதி முற்றிற்று

வருநற் கங்கை வடதிசைப் பெருமையும் தென்றிசைச் சிறுமையும் நீக்கிற குறுமுனி குண்டிகைப் பழம்புனற் காவிரிப் பெரும்பதி அம்பற்கதிபதி சேந்தன் றிவாகரத் தாறாவது பல்பொருட்பெயர்த்தொகுதி முற்றிற்று.

இந்த இரண்டுனுள் முதலாவதில் “அரக்கரைப் பொருத முரட்போர் வில்” என்றது, இலங்கையில் அரக்கரைப் பேரிட்டு வென்ற இராமனின் பார வில் ஆகும். இதை நமச்சிவாயப்புலவன் தனது “சிங்கைச் சிலேடை வெண்பா”வில்: “அத்திரத்தால் சோர விலங்கையினான் சோரவென்ற வாளிதொட்ட பார வில்”; என்று குறிப்பிட்டுள்ளார்.

“பாரதம் பொருத பேரிசைச் சிலை” என்பது: அருச்சுனனின் வில்லாகும்.

“தாருகற் கடிந்த வீரத்தயில்” என்றது: தாருகனைக் கொன்ற முருகனின் வேல் ஆகும்.

இந்தநிலையில், சேந்தன் தானே சம்ஸகிருத ராமாயண, பாரத, குமார சம்பவ@ தமிழ் இராமாயணம், மகாபாரதம், கந்தப்புராணம் என்பவைகளை இயற்றியதாக உரிமைகோரியுள்ளான்!

இது, வால்மீகி, வேதவியாச, காளிதாஸ, கம்பன், வில்லிபுத்தூர் ஆழ்வார், கச்சியப்பர் என்போர்கள் கற்பனையில் உருவாக்கப்பட்ட புலவர்கள் ஆகின்றனர்!

இரண்டாவது பாட்டில் “குறுமுனி” என்றது ‘அகத்தியன்’ ஆகும். இந்தநிலையில், சமஸ்கிருதம், தமிழ் மொழி என்பவைகளின் இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும் இயற்றியது தானே எனச் சேந்தன் உரிமைகோருகிறான்.

இவைகள் ‘சிங்கைச் சிலேடை வெண்பா,’ ‘தனிப்பாடற்றிரட்டு’ என்பவைகளின் பாட்டுக்கள் கூறியிருப்பவைகளுடன் ஒன்றுகின்றன@ ‘ராமாயண’ ஆனது பௌத்த காவியம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இதை இராமாயணத்தினூடாகவும் உறுதிப்படுத்தவேண்டியுள்ளது.இதற்கு இராமாயணம் என்ன காவியம் என்பதை விஞ்ஞான ரீதியாக ஆராயவேண்டியிருப்பதுடன், இராமாயணம் நூலையும், அதன் பாட்டுக்களையும், அதன் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள பாட்டுக்களையும் ஆராயவேண்டியுள்ளது.

கம்பராமாயணத்தின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மூன்று பாட்டுக்களும், முறையே புத்தன் மணி, தம்மம் மணி, சங்கம் மணி என்ற பேளத்த மும்மணியைத்தான் போற்றுகின்றன. இங்கு பௌத்தத்துடன் இலக்கிய அடையாளப்படுத்துகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இராமாயணம் ஆனது பௌத்த காவியமாக இருக்கமுடியும். மேலும் இது என்ன காவியம் என்பதை அறிய, மணிமேகலையின் காதை - 12இன் வரி 72 முதலாகக் கூறப்பட்டிருப்பவைகள் ஆராயப்படவேண்டும். மணிமேகலை பற்றிய ஆராய்வில், இலங்கையில் சோழரின் மேலாதிக்கத்தின் கீழ் நிலைகுலைந்த பௌத்தம் மீண்டும் கி. பி. 1073இல் புத்துயிர் பெற்றதின் அடிப்படையில்தான் இராமாயணம் ஆனது காவிமாக உருவாக்கப்பட்டது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆகவே, வேதவியாசரும், கம்பனும் கற்பனையாக ஒரு பௌத்த பெரும் துறவிப் புலவனால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது உறுதியாகிறது. இது சேந்தன் திவாகரம் பாட்டுக்கள் கூறுபவையுடன் ஒன்றுகின்றது.

இந்தநிலையில், பாரதம், கந்தப்புராணம் என்பவைகளும் மஹாயாண பௌத்தத்தின் உருவாக்கங்களா என்பதும் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படவேண்டியுள்ளது.

"கந்தன் " என்றால் என்ன?

"கந்தன்" என்பதற்குத் தமிழ் அகராதிகள்: குமரன், முருகன், அருகன் என்பவைகளைப் பொருள்களாகத் தந்துள்ளன. பாளி மொழியில் "கந்த" (Gandho) என்ற சொல் உள்ளது. சமஸ்கிருத மொழியிலும் "கந்த" (gandha) என்ற சொல் உள்ளது. சிங்களத்திலும் இந்தச் சொல் உள்ளது.

இம்மூன்று மொழிகளிலும், "கந்த" என்பதற்கு: smell, odour, fragrance,scent, perfume என்ற பொருள்கள் உள்ளன. சிங்கள மொழியில் "கந்த" என்பதற்கு, மலையும் பொருளாக உள்ளது.

ஆனால், தமிழ் மொழியில் கந்தன் என்றால் என்ன என்பதற்கு, தெளிவான பதிலை தமிழ் வித்தகர்களிடமிருந்து பெறமுடியாதுதான் இருந்துவருகிறது.

இந்தநிலையில், கந்தன் என்றால் என்ன என்பதை நாமாக ஆராயந்தறிவோம்.

"கந்தன்" என்பது: "க் + ண் + த் + அன்" ஆகும். இது வெறுமை(க்) வெளிப்படுத்துகை(ண்) உயர்ச்சித் (த்) தன்மையானவன் ஆகும். 

வெறுமை வெளிப்படுத்துகை உயர்ச்சித் தன்மையை நாம் அன்பு, அறிவு, அருள், அறம், அழகு, ஒளி, இனிமை, புனிதம், வாசனை, மலை அல்லது குன்று, ... மற்றும் பலவற்றில் அடையாளங்காண முடியும்.

ஆகவே, "கந்தன்" என்பது: அன்புமயமானவன், அருள்மயமானவன், அறிவன், ஆசிரியன், போதனையாளன், அழகன், ஒளிமயமானவன், செம்மையானவன், மலையான், வாசனையானவன், .... எனவெல்லாம் வரும்.

இவைகள் "சிவன்" என்பதனுடனும் ஒன்றும், புத்தபெருமானுடனும் ஒன்றும். "சிவன்" என்ற சொற்கு இவைகள்தான் பொருள்கள்.

‘சிவன்‘ என்றால் என்ன? ‘சிவன்‘ (ச் + இ + உ + அன்) என்பது: மேன்மை(ச்) நிறைவு(இ) உயிர்ப்புத் (உ) தன்மையானவன். "மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை"யை நாம் அன்பு, அருள், அறம், அறிவு, அழகு, புனிதம், இன்பம், செம்மை, இனிமை, ஒளி, ... எனப் பலவற்றில் அடையாளங்காண முடியும். ஆகவே, "சிவன்" என்பது அன்புமயமானவன், அருள்மயமானவன், அறிவன், அறமயமானவன், அழகன், புனிதன், இன்பமயமானவன், செம்மையானவன், இனிமையானவன், ஒளிமயமானவன், .... ஆகும் இவை புத்தபெருமானுடனும் ஒன்றும்.

இந்தநிலையில், புத்தபெருமானதும், அவரது குணங்களினதும், போதனையினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கடவுளைக் "கந்தன்" என்றும் குறிப்பிடமுடியும். ஆனால், "கந்தன்"என்ற கடவுள் ஒரு கையில் வேலையும், ஒரு கையில் மணியையும் கொண்டிருப்பதுடன், நெற்றியில் முக்குறியையும் வைத்திருப்பவன் ஆகும். இந்தநிலையில், இவைகள் எப்படிப் புத்தபெருமான், அவரது போதனை என்பவைகளுடன் ஒன்றும் என்ற கேள்வி எழுகிறது.

இங்குதான் நாம் "அடையாளப்படுத்துகை" (Symbolization) என்பதை விஞ்ஞான ரீதியாக விளங்கியிருக்கவேண்டியுள்ளது. மணி ஆனது, சங்கு, உடுக்கு, புல்லாங்குழல், மேளம், ஏனையவைகளைப்போல் ஒலியை எழுப்பக்கூடிய ஒரு சாதனம் ஆகும். மணியால் எழுப்பப்படும் ஒலியானது, எந்தவித பாகுபாடும் இன்றி, சுற்றாடலில் இருக்கும் அனைவருகேட்கக்கூடியது. ஆகவே, மணியானது பகிரங்க அறிவித்தலை, அல்லது சகலருக்கும் போதனை செய்வதை அடையாளப்படுத்தமுடியும். இந்தநிலையில், கந்தனால் என்ன போதிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை அவனது மறுகையில் வைக்கப்பட்டுள்ள 'வேல்' எமக்குத் தருகிறது. 'வேல்' ஆனது இரண்டு முனைப்புக்களை எதிர் எதிர் திசையில் கொண்டதும், நடுவில் கூரான பகுதியையும் கொண்டது. ஆகவே, இது நடுவுப்பாதையை (the Middle Path) அடையாளப்படுத்துகிறது. ஆகவே, "கந்தன்" நடுவுப்பாதையைச் சகலருக்கும் போதிப்பவன் ஆகிறான்! மேலும், அவனது நெற்றியில் 'முக்குறி' (the Triple Stripe) வைக்கப்பட்டுள்ளது. 'முக்குறி'யும் நடுவுப்பாதையை அடையாளப்படுத்துகிறது. ஆகவே, "கந்தன்" நடுவுப்பாதையைத் தானும் கடைப்பிடிப்பதுடன், அதைப் பிறருக்கும் போதனை செய்பவன் ஆகின்றான்!

ஆனால், நடுவுப்பாதை (the Middle Path) யானது, பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும், பௌத்த அறமாகும்! ஆகவே, "கந்தன்" என்ற கடவுள் புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்ட கடவுள் ஆகும். புத்தபெருமானையும், பௌத்தத்தினையும் அடையாளப்படுத்துவதைத் தேரவாத பௌத்தம் முழுமையாக நிராகரிக்கிறது. 'மஹாயாண' பௌத்தம்தான் ஏற்கிறது. ஆகவே, "கந்தன்" என்ற கடவுள், புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் மஹாயாண பௌத்தர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுளாகும்!

இதைவிட, "கந்தன்" என்ற கடவுள் தெய்வானை, வள்ளி என்ற இரண்டு முனைப்புத் தன்மைகளின் நடுவில் வைக்கப்படுவதன்மூலமும், நடுவுப்பாதையுடன் (the Middle Path) அடையாளப்படுத்தப்படுகிறான்.

ஆகவே, ‘கந்தன்‘ என்ற கடவுள் புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் தமிழ் மஹாயாண பௌத்தர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்ட கடவுள் ஆகும்.

ஆகவே, சேந்தன திவாகரத்தில் கந்தன் தொடர்பாகக் கூறப்பட்டிருப்பதும், சரியானதாகிறது. இப்டி ஏனையதும் நிரூபிக்கப்படமுடியும்.

ஆகவே, அகத்தியன் என்பதும் இவைபோன்றதே!

ஒட்டு மொத்தத்தில், தமிழ், சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்தும், தமிழ் மஹாயாண பௌத்தர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.அவற்றை இயற்றிய புலவர்களும், கற்பனை உருவாக்கங்களே.


இதையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவாகர_நிகண்டு&oldid=1274621" இலிருந்து மீள்விக்கப்பட்டது