நரந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பகுப்பு:சங்க கால மலர்கள் சேர்க்கப்பட்டது using HotCat |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]] |
04:28, 12 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்
நரந்தம் என்பது ஒருவகை மலர்.
இந்த நரந்தத்தைப் புல் என்பர். அவர்கள் அங்குத் தொகுக்கப்பட்டுள்ள அனைத்துச் செய்திகளையும் காணவேண்டும்.
இந்த மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
- சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. [1]
- சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். [2]
- சோலையில் பூத்துக் குலுங்கும். [3]
- காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். [4]
- நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். [5]
- நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மொருள்களில் ஒன்று. [6]
- அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். [7]
- நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். [8] [9] [10]
- இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம். [11]
- புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம். [12]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ குறிஞ்சிப்பாட்டு – அடி 94
- ↑ பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141
- ↑ பரிபாடல் 7-11
- ↑ பரிபாடல் 16-15
- ↑ நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302
- ↑ நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237
- ↑ புறநானூறு 235
- ↑ நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266
- ↑ கலித்தொகை 54-5
- ↑ நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553
- ↑ கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11
- ↑ மணிமேகலை 3-162