இப்னு துபைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்னு துபைல்
பதவிIbn Tufayl
Abubacer Aben Tofail
Abu Jaafar Ebn Tophail
Avetophail
சுய தரவுகள்
பிறப்பு1105
இறப்பு1185 (அகவை 79–80)
சமயம்இசுலாம்
குறிப்பிடத்தக்க ஆக்கம்Hayy ibn Yaqdhan
(Philosophus Autodidactus)

இப்னு துபைல் (கிபி 1105 – 1185) (அரபு பெயர் : أبو بكر محمد بن عبد الملك بن محمد بن طفيل القيسي الأندلسي அபுபக்கர் முஹம்மது இப்னு அப்துல்-மாலிக் இப்னு முஹம்மது இப்னு துஃபைல் அல்-கைசி அல்-ஆண்டலுசி ) ஓர் அரபு ஆண்டலுசியன் ஆவார்: [1] இவர் ஒரு எழுத்தாளர், நாவலாசிரியர், இஸ்லாமிய தத்துவஞானி, இஸ்லாமிய இறையியலாளர், மருத்துவர், வானியலாளர், மந்திரி மற்றும் நீதிமன்ற அதிகாரி என பல்துரை வித்தகராவார்.

வாழ்க்கை[தொகு]

இப்னு துபைல் தற்போதைய எசுப்பனியத்தின் கிரனாடாவிற்கு அருகிலுள்ள குவாடிக்சு எனும் ஊரில் பிறந்த இவர் இப்னு பஜ்ஜா என்பவரிடம் கல்வி பயின்றார். அவர் இசுலாமிய பொற்கால ஆட்சியில் கிரனாடா மாகாண ஆட்சியாளரின் செயலாளராகவும், பின்னர் கலீபாவான அபு யாகூப் யூசுப்பின் மந்திரியாகவும் மற்றும் மருத்துவராகவும் பணியாற்றினார், 1169 இல் தனது வாரிசாக இப்னு ருஷ்தை பரிந்துரைத்தார். இப்னு ருஷ்ட் பின்னர் இந்த நிகழ்வை, தனது புகழ்பெற்ற அரிஸ்டாட்டிலியன் புத்தகத்தில் இப்னு துபைல் அவரை எவ்வாறு எழுத தூண்டினார் என்பதை விவரிக்கிறார்:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_துபைல்&oldid=3407461" இலிருந்து மீள்விக்கப்பட்டது