வினாயகரின் அறுபடை வீடுகள்
Appearance
இந்து சமயக் கடவுளான வினாயகருக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் கோயில்கள் இருக்கின்றன அவற்றில் ஆறு இடங்கள் மிகச் சிறப்பானவையாகக் கொண்டு அவற்றை வினாயகரின் அறுபடைவீடுகள் (முருகரின் அறுபடைவீடுகள் போன்று) என்று குறிப்பிடுகின்றனர். வினாயகரின் அறுபடைவீடுகளாக பல்வேறு கோயில்கள் சொல்லப்படுகின்றன, இருந்தாலும் பெரும்பாலானோரால் குறிப்பிடப்படும் கோயில்கள் வரிசைக்கிரமமாக பின்வருமாறு அமைகிறது.
- திருவண்ணாமலை
- திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயிலில் உள்ள ஆழத்து பிள்ளையார்
- திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்
- திருச்சி உச்சிப் பிள்ளையார் (அ) மதுரை ஆலால சுந்தர வினாயகர்
- பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் (அ) காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
- திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்