வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசிங்டன் கடற்படைத் தளம்

வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு நிகழ்வு செப்டம்பர் 16 , 2013 ஆம் ஆண்டு காலை 08:15 மணியளவில் வாசிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். அதில் மர்ம நபர் ஒருவரும் அடக்கம்.மேலும் 14 பேர் காயமடைந்தனர்..[1][2]

இறந்தவர் விவரம்[தொகு]

பெயர் வயது
மைக்கேல் அர்னால்ட் 59
சில்வியா ஃப்ரைசர் 53
கேத்தே கார்டி 62
ஜாண் ரோஜர் ஜாண்சன் 73
ஃபிராங் கோலர் 50
கென்னத் பெர்னார்டு ப்ரோக்டர் 46
விஷ்ணு பண்டிட் 61

மர்ம நபர்[தொகு]

மர்ம நபர்கள் ராணுவ உடை அணிந்திருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஆரோன் அலெக்ஸிஸ் (மே 9, 1979 – செப்டம்பர் 16, 2013) [3] என்ற மர்ம நபர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் இத்துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். இவர் முன்பொரு முறை 2004 ஆம் ஆண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்நிலவரம்[தொகு]

இப்பகுதியில் அமைந்திருக்கும் 8 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.[4]

மேற்சான்றுகள்[தொகு]