வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவில் என்பது மதுரை மாவட்டம் வண்டியூரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலாகும்.[1]

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலாக உள்ளது. கள்ளழகர் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வு இக்கோவிலில் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வு இக்கோவிலில் நடைபெறுகிறது. தேனூர் மண்டபத்தில் கொக்கிற்கு மோட்சம் கொடுத்த நிகழ்வு வருடம் தோறும் சித்திரை திருநாள் நிகழ்வில் நடைபெறுகிறது. வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இங்கு பாம்பு வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலின் மூலவராக வீரராகவப்பெருமாளும் உற்சவராக கள்ளழகரும் ஆண்டாள் நாச்சியாரும் இருக்கிறார்கள்


மேற்கோள்கள்[தொகு]