ம. சவரிமுத்து
ம. சவரிமுத்து (பிறப்பு: சூன் 14 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற துணைப் பாதுகாவலராவார். 'நித்திலன்' எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ம. சவரிமுத்து பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்