மௌனோற்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌனோற்சவம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் மறைத்தல் தொழிலை நிகழ்த்துகின்றதாகும். தீர்த்தத்திருவிழாவும் மறைத்தலை குறிக்க கூடிய உற்சவமாகும்.[1]

வகைகள்[தொகு]

மௌனமாவது வாக்குமோனம், கரணமோனம், காட்ட மோனம், சுழுத்திமோனம் என நான்கு வகைப்படும்.

  1. வாக்கு மௌனம் - வாய் பேசாதிருத்தல்
  2. கரண மௌனம் - காது முதலிய இந்திரியங்கள் ஒருவழிப்பட்டு அடக்கியிருத்தல்
  3. காட்ட மௌனமாவது - சரீரம் அசையாதிருத்தல்
  4. சுழுத்தி மௌனம்

சப்தம் ஏற்படுத்தாமல் இருப்பது மௌனமாகும். சத்தமின்றி இருப்பதில் பூரண அமைதி உருவாகிறது. மௌனத்தின் தன்மை பூரண அமைதியாகும்.


காட்டமௌனத்தின் படி சரீரம் எனும் உடல் அசையாது இருக்க வேண்டும். அசைகின்ற ஒன்றால்தான் சத்தம் எழுகிறது. உடல் அசைவற்று இருக்கையில் மௌனம் பிறக்கிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. மகோற்சவ விளஙக்கம் நூல் - ச.குமாரசாமி குருக்கள் - 1958 ஜூலை பதிப்பு - வித்தியாநுபாலன அச்சகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌனோற்சவம்&oldid=3711888" இலிருந்து மீள்விக்கப்பட்டது