மைலாரா மகாதேவப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் 2018 ஆம் ஆண்டு முத்திரையில் மைலாரா மகாதேவப்பா

மைலாரா மகாதேவப்பா (8 ஜூன் 1911 - 1 ஏப்ரல் 1943), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மோட்பென்னூரைச் சேர்ந்த மகாதேவா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு இந்தியப் புரட்சியாளர். பிரிட்டிசு ஆட்சியை எதிர்ப்பதில் பெயர் பெற்றவர். மார்த்தாண்டம் மற்றும் பாசம்மா இவருடைய பெற்றோர். 18 வயதில், கர்நாடகாவின் ஒரே பிரதிநிதியாக மகாத்மா காந்தியுடன் தண்டி யாத்திரை அணிவகுப்பில் சென்றார்.

2018 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் மூலம் வெளியிடப்பட்ட முத்திரையில் சித்தரிக்கப்பட்டார். இவரது நினைவாக ஒரு நினைவு அறக்கட்டளை பெயரிடப்பட்டது. [1] [2] [3] [4] மயிலாரா மகாதேவப்பா மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்க அழைப்பில் பங்கேற்று, 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, கொசரிட்டி கிராமத்தில் வீரபத்ர சுவாமியின் நில வருமானத்தை காலனித்துவ அதிகாரிகள் வைத்திருந்த கருவூலத்தை உடைக்கும் போது அவரது சீடர்களான திரகப்ப மதிவளர் மற்றும் வீரய்யா கிரேமத் ஆகியோருடன் விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக வசூல் செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Vaddiraju, Anil Kumar. Sisyphean Efforts? State Policy and Child Labour in Karnataka. https://books.google.com/books?id=zFoxBwAAQBAJ&pg=PA25. 
  2. Basavaraj, S. The Legend of Mahadevappa, Karnataka's own Bhagat Singh. News Karnataka, 31 August 2018.
  3. Hugar, Gangadhar (15 August 2016). "Freedom fighter's tales of valour". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
  4. "India Post Issued Stamp and Sheetlet on Freedom Fighter Mahadevappa Mailara" (in அமெரிக்க ஆங்கிலம்). PhilaMirror. 4 September 2018. பார்க்கப்பட்ட நாள் 9 February 2020.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைலாரா_மகாதேவப்பா&oldid=3740496" இலிருந்து மீள்விக்கப்பட்டது