மூவேந்தர் குடிப் பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேர, சோழ, பாண்டியர் என்னும் தொகைச்சொல் மூவேந்தரைக் குறிக்கும். இவர்கள் தம் குடியின் அடையாளச் சின்னமாக வெவ்வேறு பூக்களை அணிந்தனர். இதனைக் குடிப் பூ என்றும் அடையாளப் பூ என்றும் சொல்லலாம்

  • சேரர் - பனைமடலால் செய்த பூ
  • சோழர் - ஆர் (ஆத்தி)
  • பாண்டியர் - வேம்பு

சான்றுகள்[தொகு]

  • தொல்காப்பியம் புறத்திணையில் வெட்சித்திணையின் துறைகளைக் கூறும்போது தொல்காப்பியர் மூவேந்தரின் குடிப்பூ பற்றிக் குறிப்பிடுகிறார். 'போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மா பெருந் தானையர் மலைந்த பூ' என்கிறார். [1]
  • 'வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் கொற்ற வேந்தர்' என்று மூவேந்தரின் குடிப்பூக்கள் அடுக்கிக் காட்டப்பட்டுள்ளன. [2]
  • புலவர் கோவூர் கிழார் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் அறிவுரை கூறும்போது 'நீங்கள் இருவரும் ஆர் (=ஆத்திப் பூ) சூடியவர்கள். பனைமரத்தினை வெண்தோடும், வேம்பும் அணிந்தவர் (முறையே சேரரும், பாண்டியரும்) அல்லர் என்று குறிப்பிடுகிறார். [3]
    • பனங்குருத்து மாலைகளைத் தலையில் சூடிக்கொண்டனர். [4]

மேலும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் புறத்திணையியல் நூற்பா 4-4
  2. புறநானூறு 338
  3. புறநானூறு 45
  4. மறங்கெழு போந்தை வெண்தோடு புனைந்து நிறம் பெயர் கண்ணி - பதிற்றுப்பத்து 51
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவேந்தர்_குடிப்_பூ&oldid=1233959" இலிருந்து மீள்விக்கப்பட்டது