முட்டம் நாகேசுவரர் கோயில்
தோற்றம்
| திருப்புகழ் பாடல் பெற்ற முட்டம் நாகேசுவரர் கோயில் | |
|---|---|
கோயிலின் அமைவிடம் | |
| புவியியல் ஆள்கூற்று: | 10°58′N 76°55′E / 10.97°N 76.91°E |
| பெயர் | |
| பெயர்: | முட்டம் நாகேசுவரர் கோயில் |
| ஆங்கிலம்: | Muttam Nageswarar Temple |
| அமைவிடம் | |
| ஊர்: | [[]] |
| மாவட்டம்: | கோயம்புத்தூர் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | நாகேசுவரர் |
| தாயார்: | முத்துவாளியம்மன் |
| சிறப்பு திருவிழாக்கள்: | சித்திரை பௌர்ணமி, மகா சிவராத்திரி |
| பாடல் | |
| பாடல் வகை: | திருப்புகழ் |
| பாடியவர்கள்: | அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
| கல்வெட்டுகள்: | உண்டு |
| வரலாறு | |
| தொன்மை: | சுமார் 1000 ஆண்டுகள் |
| கட்டப்பட்ட நாள்: | கி.பி. 10 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டு |
முட்டம் நாகேசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும்.[1] இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் நாகேசுவரர் என்ற பெயருடன் முத்துவாளி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.