மாபூதனார் பாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாபூதனார் பாட்டியல் என்னும் பாட்டியல் நூல் 9 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பது மு. அருணாசலம் கணிப்பு. [1] நவநீதப் பாட்டியல் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரையில் இந்த நூலைப்பற்றிய குறிப்பு உள்ளது. இந்த நூலில் இனவியல் பகுதி 5 பிரிவுகளாக உள்ளது என்பதையும், மங்கல வெள்ளை, தாண்டகம் ஆகிய சிற்றிலக்கியங்களுக்கு இந்நூல் கூறும் விதிகளையும் நவநீதப் பாட்டியல் உரை குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 236. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபூதனார்_பாட்டியல்&oldid=1457942" இலிருந்து மீள்விக்கப்பட்டது