மதுரை புத்தகத் திருவிழா 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
10வது மதுரை புத்தகத் திருவிழா, 2015
10ஆவது மதுரை புத்தகத் திருவிழாவில், பார்வையாளருக்கு தமிழ் விக்கிப்பீடியா குறித்து விளக்கும் நிர்வாகி

10ஆவது மதுரை புத்தகத் திருவிழா அல்லது மதுரை புத்தகக் கண்காட்சி 2015 என்பது 28 ஆகஸ்டு 2015 முதல் 7 செப்டம்பர் 2015 முடிய பத்து நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியாகும். ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. அந்த வகையில் இந்த புத்தகத் திருவிழா 10ஆவது ஆகும்.[1][2][3]

நேரம்[தொகு]

தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை

சிறப்பம்சங்கள்[தொகு]

  • 2 இலட்சம் தலைப்புகளில் நூல்கள்
  • 250 புத்தக அரங்குகள்

கருத்தரங்கம்[தொகு]

இப்புத்தகத் திருவிழாவின் போது மாலை 5. 30 மணி முதல் இரவு 9 மணி முடிய சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரையில் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்:250 அரங்கங்கள்; 7 செப்டம்பர் வரை நடக்கிறது
  2. மதுரையில் புத்தகத் திருவிழா தொடக்கம்
  3. Tamil titles turn out to be a fair attraction

வெளியிணைப்புகள்[தொகு]